குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆக உள்ளது என்ற அமைச்சர் இதனை அதிகரிக்க திட்டம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

2022-23 நிதியாண்டில் 20.93 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உட்பட 65.74 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ₹2.41 டிரில்லியன் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, ரயில்வே, தபால்துறை ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியங்களும் இதில் அடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார். 7,80,509 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 3,61,476 குடும்ப ஓய்வூதியதாரர்கள் மொத்தம் ₹40,811.28 கோடியை ஓய்வூதியமாகப் பெற்றுள்ளனர். பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள், 23,31,388 பேர், 8,35,043 குடும்ப ஓய்வூதியர்களுடன் சேர்ந்து ₹1.25 டிரில்லியன் பெற்றனர்.

பெரிய நிறுவனங்கள் எல்லாம் உங்களைத்தான் தேடுறாங்க! தமிழர்களுக்கு ஐஸ் வைக்கும் வேதாந்தா அனில் அகர்வால்!

தொலைத்தொடர்பு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மொத்தம் 4,38,758 பேருக்கு ₹12,448.00 கோடி ஒதுக்கப்பட்டது. ரயில்வே ஓய்வூதியர்கள், 8,56,058 பேர் மற்றும் குடும்ப ஓய்வூதியயர்கள் 6,69,710 பேர், ₹55,034.00 கோடி பெற்றுள்ளனர். அஞ்சல் துறை மூலம் 1,95,298 ஓய்வூதியதாரர்களுக்கும், 1,06,467 குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ₹8,214.85 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கணிசமான செலவு இருந்தபோதிலும், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆக உள்ளது என்ற அமைச்சர் இதனை அதிகரிக்க திட்டம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பணவீக்கத்தின் பாதிப்பை ஈடுகட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

சிவில் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகம், பாதுகாப்பு ஓய்வூதியர்களுக்கு பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம், தொலைத்தொடர்பு ஓய்வூதியதாரர்களுக்கு தொலைத்தொடர்புத் துறை, ரயில்வே ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரயில்வே வாரியம் மற்றும் தபால்துறை ஓய்வூதியதாரர்களுக்கு தபால்துறையும் ஓய்வூதியங்களை வழங்கியுள்ளன.

மணிப்பூரில் மற்றொரு கொடுமை! தீ வைக்கப்பட்ட வீடு... தப்பி ஓடிய பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம்!