Asianet News TamilAsianet News Tamil

சவரன் 30 ஆயிரத்தை தொட இன்னும் ரூ.168 தான் பாக்கி..! தங்கம் தாறுமாறு விலை உயர்வு ..!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சவரன் ரூபாய் 26 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.  தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆகிறது.

gold rate sudden hike on 3rd sep 2019
Author
Chennai, First Published Sep 3, 2019, 4:48 PM IST

சவரன் 30 ஆயிரத்தை தொட இன்னும் ரூ.168 தான் பாக்கி..! 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதிலிருந்து சவரன் விலை 2,500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சவரன் ரூபாய் 26 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.  தற்போது 29 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆகிறது. இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என அனைத்தும் சேர்த்து 33 முதல் 34 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகி இருப்பதாக பொதுமக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கிராமத்து 16 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது

gold rate sudden hike on 3rd sep 2019

காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராம் ரூ. 3718.00(16 ரூபாய் உயர்வு), சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையானது

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 3729.00 ரூபாயாகவும், சவரன் 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் கிராமுக்கு 27 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து உள்ளது. இன்னும் ரூ.168 உயர்ந்தால் சவரன் ரூ.30 ஆயிரத்தை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம் 

இன்று ஒரே நாளில்  60 பைசா உயர்ந்து  52.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios