தபால் நிலையச் சேமிப்பு திட்டங்கள் சாதாரண மக்களுக்கு எளிதான, பாதுகாப்பான சேமிப்பு வழிகளை வழங்குகின்றன. SCSS, SSY, PPF, NSC போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் வட்டி வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பைப் பெறலாம்.

சாதாரண மக்களுக்கே எளிதாக சேமிப்பை தொடங்கிக்கொள்ளும் பாதுகாப்பான இடமாக தபால் நிலையச் சேமிப்பு திட்டங்கள் (Post Office Small Savings Schemes) இன்று வரை மிகவும் நம்பகமாக இருந்து வருகின்றன. அரசு உத்தரவாதம் கொண்டதால், முதலீட்டில் எந்த அபாயமும் இல்லாமல் சிறந்த வட்டி விகிதம் கிடைப்பது இதன் சிறப்பு. 2025 ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரை வட்டி விகிதங்களில் பெரிதாக மாற்றம் இல்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மற்றும் சுகன்யா சம்ருத்தி யோஜனா (SSY) இரண்டிற்கும் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. நீண்டகால முதலீடாக பப்ளிக் புராவிடண்ட் பண்ட் (PPF) 7.1% மற்றும் நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC) 7.7% வட்டி அளிக்கிறது. மாதாந்திர வருமானம் தேவைப்படுவோருக்கான மந்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS) 7.4% வட்டி தருகிறது.

அதுமட்டுமின்றி ஆதார் e-KYC மூலம் RD மற்றும் PPF கணக்குகளை கையெழுத்து இன்றி திறக்கவும், பணம் எடுத்துக் கொள்ளவும் வசதி வந்துள்ளது. மேலும், சுகன்யா, PPF, NSC போன்ற திட்டங்கள் காலாவதியான பிறகு 3 ஆண்டுகளில் புதுப்பிக்கவில்லையெனில், அந்த கணக்குகள் ‘Freeze’ ஆகும் என்ற எச்சரிக்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) திட்டத்தில் புதிய முதலீடுகள் மார்ச் 2025க்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பழைய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை ECS மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதி கிடைத்துள்ளது.

சாதாரண மக்களுக்கு ஏற்ற முக்கியமான திட்டங்களில் SSY சிறுமிகளுக்கான சேமிப்பாக சிறந்தது; 80C வரிச்சலுகையும், வட்டி வரியும் முழுமையாக விடுவிப்பு கிடைக்கும். SCSS ஓய்வுபெற்றோருக்கு உறுதியான காலாண்டு வருமானத்தை தருகிறது. PPF, NSC நீண்டகாலத்தில் செல்வம் உருவாக்க உதவுகின்றன.

மாதந்தோறும் நிலையான வருமானம் தேவைப்படும் குடும்பங்கள் POMIS திட்டத்தைத் தேர்வு செய்யலாம். குறுகிய கால தேவைகளுக்காக Recurring Deposit (RD) அல்லது Time Deposit (TD) திட்டங்கள் 6.7% முதல் 7.5% வரை வட்டி தருகின்றன. அவசரத் தேவைக்காக 4% வட்டி தரும் தபால் சேமிப்பு கணக்கும் எப்போதும் பயன்படுத்தக்கூடியது.

முடிவாக, வரி சேமிப்பு, குழந்தை கல்வி, ஓய்வூதிய திட்டம், அல்லது மாதாந்திர வருமானம் போன்ற எதற்காக வேண்டுமானாலும் தபால் நிலையச் சேமிப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதான, பாதுகாப்பான, அரசு உத்தரவாதம் கொண்ட சிறந்த வழிகள். முதலீடு செய்யும் முன் உங்கள் வயது, இலக்கு, காலம் ஆகியவற்றைப் பார்த்து திட்டத்தை தேர்வு செய்தால் அதிக பயன் கிடைக்கும்.