Asianet News TamilAsianet News Tamil

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு இப்போது பாகிஸ்தானின் பொருளாதாரத்தை விட அதிகம்.. எவ்வளவு தெரியுமா?

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட அதிகமாக உள்ளது.

At 365 billion, Tata Group's market value is now more than entire economy of Pakistan Report Rya
Author
First Published Feb 19, 2024, 1:12 PM IST

டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட அதிகமாக உள்ளது. டாடா குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் கடந்த ஆண்டில் நல்ல லாபத்தை ஈட்டி அதிக வருமானத்தை ஈட்டி வருகின்றன. அந்த வகையில் டாடா குழுமத்தின் சந்தை மூலதனம் தற்போது 365 பில்லியன் டாலராக உள்ளது, இது பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை விட அதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் படி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 341 பில்லியன் டாலர் ஆகும். 

 

டாடா குழுமத்தின் நிதி வெற்றி

Tata Motors மற்றும் Trent Titan, TCS மற்றும் Tata Power போன்ற முக்கிய நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, டாடா குழுமத்தின் சந்தை மூலதனத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. TRF, Trent, Benaras Hotels, Tata Investment Corporation, Tata Motors, Automobile Corporation of Goa மற்றும் Artson Engineering உட்பட, 8 டாடா நிறுவனங்கள் இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான டிசிஎஸ்-ன் மதிப்பு 170 பில்லியன் டாலராகும்.இது தற்போது பாகிஸ்தானின் மொத்தப் பொருளாதாரத்தில் பாதி அளவு உள்ளது. கூடுதலாக, டாடா கேபிடல், அடுத்த ஆண்டு தனது ஐபிஓவை தொடங்க திட்டமிட்டுள்ளது, இதன் மதிப்பு ரூ. 2.7 லட்சம் கோடியாகும்.

தொடர்ந்து போராடி வரும் பாகிஸ்தானின் பொருளாதாரம் 

டாடாவின் நிதி வெற்றிக்கு முற்றிலும் மாறாக, பாக்கிஸ்தான் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. 2022-ம் நிதியாண்டில் 6.1% மற்றும் 2021-ம் நிதியாண்டில் 5.8% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் 2023-ம் நிதியாண்டில் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதம் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

காசோலை பவுன்ஸ் ஆச்சு இனி அவ்ளோதான்.. எவ்வளவு அபராதம் மற்றும் தண்டனை உள்ளது தெரியுமா.?

மேலும், தற்போது பாகிஸ்தான் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது, வெளிநாட்டு கடன் மற்றும் பொறுப்புகள் 125 பில்லியன் டாலர்களை எட்டுகிறது. ஜூலையில் தொடங்கி 25 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதற்கு நாடு பெரும் அழுத்தத்தில் உள்ளது. இது அந்நாட்டின் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பாகிஸ்தானின் 3 பில்லியன் டாலர் திட்டம் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது. நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம் ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு $8 பில்லியனாக இருப்பதால், பாகிஸ்தான் அதன் நிதி நிலப்பரப்பை கவனமாக வழிநடத்த வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறது.

ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கும் மத்திய அரசின் பீமா யோஜனா காப்பீடு!

டாடா குழுமத்தின் நிதி வெற்றி மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார சவால்கள் உலகளாவிய பொருளாதார அரங்கை வடிவமைக்கும் சிக்கலான இயக்கவியலை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. டாடா குழுமம் அதன் குறிப்பிடத்தக்க சந்தை மூலதன வளர்ச்சியைக் கொண்டாடும் அதே வேளையில், பாகிஸ்தான் இயற்கை பேரழிவுகளின் பின்விளைவுகள் மற்றும் அதன் நிதிப் பொறுப்புகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவைகளை எதிர்கொண்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios