Budget 2024 LIVE: மத்திய பட்ஜெட் 2024! தங்கம், செல்போன் விலை குறைகிறது!

Union budget 2024 by nirmala sitharaman speech live update in tamil on 23 july 2024

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுகிறது. செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 

 

2:42 PM IST

மக்களுக்கான பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் தரும் பட்ஜெட். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

2:17 PM IST

Budget 2024 | பட்ஜெட் 2024-25 எதிரொலி! விலை குறையும் & அதிகரிக்கும் பொருட்கள்! முழு பட்டியல் இதோ!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டிற்கான தனது 7வதுமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்கள் நுகர்வோருக்கு மலிவாகவும், விலை அதிகரித்தும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அவை எந்தெந்த பொருட்கள் என இங்கு காணலாம். மேலும் படிக்க
 

1:53 PM IST

தமிழ்நாட்டுக்கு பெப்பே காட்டிய மத்திய அரசு; பட்ஜெட்டில் 0/0 !! பீகார், ஆந்திராவிற்கு கொட்டிக்கொடுத்த பாஜக

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய உறுதுணையாக இருந்த பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகளை மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

1:32 PM IST

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜக படித்துள்ளது - ப.சிதம்பரம்

தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜக படித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 11ம் பக்கத்தில் உள்ள அம்சம் மத்திய பட்ஜெட்டிலும், 30ம் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

12:59 PM IST

தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய அரசு

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்தவித, சிறப்பு திட்டங்களோ, நிதியோ ஒதுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள தடுப்பு பணிகளுக்காக கோரப்பட்ட நிதி கூட ஒதுக்கப்படவில்லை. 

12:54 PM IST

5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறும் வகையில் மாஸ் அறிவிப்பு

பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் 63,000 உள்ளடக்கிய பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலை உயர்த்தப்படும். இதனால் 5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

12:44 PM IST

புதிய வரி விதிப்பு முறையில் சதவிகிதம் மாற்றம்

புதிய வரி விதிப்பு முறையில் 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் வரை வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை.  மேலும், 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவிகிதமும், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவிகிதமும், 10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

12:32 PM IST

வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பில்  எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

12:28 PM IST

ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:27 PM IST

வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை

மூன்றில் இரு பங்கினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை.

12:24 PM IST

செல்போனுக்கான சுங்கவரி குறைப்பு!

செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதியமைச்சர்அதாவது இவற்றின் மீதான சுங்க வரி 15 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது. 

12:20 PM IST

தங்கம் விலை குறைகிறது... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:19 PM IST

சோலர் பேனல்... 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம்

சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும்,  சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.
 

12:14 PM IST

புற்றுநோய் தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!

புற்று நோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

12:11 PM IST

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும்

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

12:10 PM IST

மூலதன செலவுக்காக ரூ. 11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

 2024-25 நிதியாண்டுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான நிதி ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக வரும் ரூ.11.11 லட்சம் கோடி மூலதனச் செலவீனமாக வெளியிடப்படும் என்றும் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

12:08 PM IST

பீகாருக்கு ரூ.21,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு. 

12:02 PM IST

மத்திய பட்ஜெட் 2024: பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு.. தமிழக எம்.பிக்கள் அமளி

பீகார் வெள்ள தடுப்பு பணிக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

12:01 PM IST

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்.. நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய  பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். 

11:58 AM IST

சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு!

சிறு குறு  தொழில்களுக்கான(MSME) காலக் கடன்களை எளிதாக்கும் நோக்கில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயங்களைக் குறைக்கும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சுயநிதி உத்தரவாத நிதி மூலம் ரூ. 100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:53 AM IST

12 புதிய தொழிற்பூங்காக்கள்.. நிதியமைச்சர் அறிவிப்பு

நாடு முழுவதும் புதியதாக 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும். 500 பெரிய நிறுவனங்களில் இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உற்பத்தி துறையில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார். 

11:50 AM IST

மத்திய பட்ஜெட் 2024: விவசாயத்துறைக்கு 1.52 லட்சம் கோடி! இயற்கை விவசாயத்தில் 1 கோடி இளைஞர்கள்!

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகக் கூறிய நிதி அமைச்சர், "விவசாயத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று கூறினார்.

 

11:48 AM IST

நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள்.. 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

11:46 AM IST

முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்வு

முத்ரா கடன் உதவித் திட்டத்தின் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட் 2024ல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

11:42 AM IST

வேளாண்மை துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:40 AM IST

அரசே வழங்கும் ஒரு மாத ஊதியம்! நிர்மலா சீதாராமன்!

மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:33 AM IST

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம்.. நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:32 AM IST

பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

11:29 AM IST

அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள்

மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல்  செய்து உரையாற்றி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

11:21 AM IST

9 முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாக கொண்டு இடைக்கால பட்ஜெட் என மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:11 AM IST

விலைவாசி கட்டுக்குள் உள்ளது.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். நாட்டின் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. சர்வதேச  பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது.

10:56 AM IST

மத்திய பட்ஜெட் 2024: நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் என்ன?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2024 இல் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா என்பது மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் படிக்க

 

10:54 AM IST

மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டை, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் சில நிமிடங்கள் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

10:39 AM IST

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10:18 AM IST

நாடாளுமன்றம் வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மோடி அரசின் 3வது ஆட்சியில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குழுவுடன் பட்ஜெட்டை தாக்கல்  செய்ய நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

10:13 AM IST

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மக்களவைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்!!

10:04 AM IST

முந்தைய வருமான வரி ஒரு பார்வை!!

முந்தைய வருமான வரியின் கீழ் ரூ. 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வரி விகிதம் 20%

ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் ஈட்டும் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேல் இருக்கும் குடிமக்களுக்கு அடிப்படை விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாகவும், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு அதாவது, 80 வயது மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும் உள்ளது. 

10:03 AM IST

குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து ஒப்புதலை பெற்றார்.

10:01 AM IST

ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து பட்ஜெட் ஒப்புதல் பெற்ற நிர்மலா சீதாராமன்!!

9:41 AM IST

இன்று மத்திய பட்ஜெட் 2024... ஏறுமுகத்தில் பங்குசந்தைகள்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னதாக, சென்செக்ஸ் மற்றும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி ஏறுமுகத்தில் காணப்படுகிறது. சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. நிஃப்டி 24,550க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறது. காலை நிலவரப்படி சென்செக்ஸ் 172 புள்ளிகள் அல்லது 0.21% அதிகரித்து 80,673.62 - ல் வர்த்தகம் செய்தது. நிஃப்டி 51 புள்ளிகள் அல்லது 0.21% அதிகரித்து 24,560.15 ஆக இருந்தது.

9:19 AM IST

மத்திய பட்ஜெட்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்?

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9:19 AM IST

நிதியமைச்சகத்துக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

9:14 AM IST

மத்திய நிதியமைச்சகத்திற்கு வருகை தந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு வருகை வந்துள்ளார். தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். பின்னர் அமைச்சரவை இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு குடியரசுத் தலைவரை சந்தித்து ஒப்புதல் பெறுவார். பின்னர் தான் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 

8:57 AM IST

Union Budget 2024: பட்ஜெட்டில் எது விலை உயர்ந்தது? எது விலை மலிவானது? முழு விபரம்!

கடந்த முழு ஆண்டு பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று சீதாராமன் தாக்கல் செய்தார். டிவி பேனல்கள் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்கள் விலை குறைந்த பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றது. அதேபோல சிகரெட் மற்றும் வெள்ளி நகைகள் விலை உயர்ந்தது. 

 

 

8:04 AM IST

சாதனை படைக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.  இந்நிலையில் இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர் என்ற மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கிறார். 

8:01 AM IST

பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; சிறப்பு அம்சங்கள் என்ன?

நரேந்திர மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். பொருளாதார ஆய்வறிக்கை குறித்த முக்கிய தகவல்கள் பற்றி பார்க்கலாம். 

இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; சிறப்பு அம்சங்கள் என்ன?

7:37 AM IST

பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% இருந்து 7 சதவிகிதத்திற்குள் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

7:21 AM IST

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் ! தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள் இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான மேம்பால விரைவு சாலை, தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் ஆகியவை இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

6:42 AM IST

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் வருமா?

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையில் வரி விலக்குக்கான உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி விதிப்பை, 25 சதவீதமாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

6:36 AM IST

7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். 

2:42 PM IST:

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் தரும் பட்ஜெட். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

2:17 PM IST:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டிற்கான தனது 7வதுமத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்கள் நுகர்வோருக்கு மலிவாகவும், விலை அதிகரித்தும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அவை எந்தெந்த பொருட்கள் என இங்கு காணலாம். மேலும் படிக்க
 

1:53 PM IST:

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை, அதே நேரத்தில் மீண்டும் பாஜக அரசு அமைய உறுதுணையாக இருந்த பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு கூடுதல் நிதிகளை மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. மேலும் படிக்க

1:32 PM IST:

தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பாஜக படித்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 11ம் பக்கத்தில் உள்ள அம்சம் மத்திய பட்ஜெட்டிலும், 30ம் பக்கத்தில் உள்ள வேலை வாய்ப்புக்கான ஊக்கத்தொகை பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

1:15 PM IST:

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்தவித, சிறப்பு திட்டங்களோ, நிதியோ ஒதுக்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள தடுப்பு பணிகளுக்காக கோரப்பட்ட நிதி கூட ஒதுக்கப்படவில்லை. 

1:16 PM IST:

பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் 63,000 உள்ளடக்கிய பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலை உயர்த்தப்படும். இதனால் 5 கோடி பழங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

1:17 PM IST:

புதிய வரி விதிப்பு முறையில் 3 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் வரை வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை.  மேலும், 3 முதல் 7 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவிகிதமும், 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவிகிதமும், 10 முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 சதவிகிதமும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவிகிதமும், அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

1:20 PM IST:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்சவரம்பில்  எந்தவித மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

12:28 PM IST:

தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:27 PM IST:

மூன்றில் இரு பங்கினர் புதிய வருமான வரி முறையை ஏற்றுக்கொண்டுள்ளனர். வருமான வரிக்கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி கிரிமினல் குற்றம் இல்லை.

1:21 PM IST:

செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர் உள்ளிட்ட உபகரணங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதியமைச்சர்அதாவது இவற்றின் மீதான சுங்க வரி 15 சதவிகிதம் வரை குறைக்கப்படுகிறது. 

1:22 PM IST:

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவிகிதமும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4 சதவிகிதமும் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

12:19 PM IST:

சோலார் பேனல் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பத்திற்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும்,  சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.
 

12:14 PM IST:

புற்று நோய் சிகிச்சை தொடர்பான 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

12:11 PM IST:

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

12:10 PM IST:

 2024-25 நிதியாண்டுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வலுவான நிதி ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமாக வரும் ரூ.11.11 லட்சம் கோடி மூலதனச் செலவீனமாக வெளியிடப்படும் என்றும் நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

12:08 PM IST:

பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  பீகாரில் உள்ள விஷ்ணு போதி, மகா போதி ஆலய வழித்தடங்களை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு. 

1:23 PM IST:

பீகார் வெள்ள தடுப்பு பணிக்காக 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என தமிழக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

12:01 PM IST:

மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய  பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். 

11:58 AM IST:

சிறு குறு  தொழில்களுக்கான(MSME) காலக் கடன்களை எளிதாக்கும் நோக்கில் கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கடன் அபாயங்களைக் குறைக்கும். ஒவ்வொரு விண்ணப்பதாரரும் சுயநிதி உத்தரவாத நிதி மூலம் ரூ. 100 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

11:53 AM IST:

நாடு முழுவதும் புதியதாக 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும். 500 பெரிய நிறுவனங்களில் இளைஞர்கள் தொழிற்பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். உற்பத்தி துறையில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றார். 

11:50 AM IST:

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பட்ஜெட்டை தயாரித்துள்ளதாகக் கூறிய நிதி அமைச்சர், "விவசாயத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1.52 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று கூறினார்.

 

11:48 AM IST:

பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டி தரப்படும். இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். 

11:46 AM IST:

முத்ரா கடன் உதவித் திட்டத்தின் உச்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட் 2024ல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

11:42 AM IST:

வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:40 AM IST:

மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கும். இதனால் 2.1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

11:33 AM IST:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

11:32 AM IST:

பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க 26 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க பட்ஜெட்டில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

11:29 AM IST:

மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல்  செய்து உரையாற்றி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

11:24 AM IST:

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை அடிப்படையாக கொண்டு இடைக்கால பட்ஜெட் என மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:13 AM IST:

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். நாட்டின் விலைவாசி விகிதம் கட்டுக்குள் உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. சர்வதேச  பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது.

11:11 AM IST:

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் 2024 இல் வருமான வரி சலுகைகள் அறிவிக்கப்படுமா என்பது மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் படிக்க

 

11:12 AM IST:

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டை, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் சில நிமிடங்கள் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

10:39 AM IST:

இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

10:18 AM IST:

மோடி அரசின் 3வது ஆட்சியில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குழுவுடன் பட்ஜெட்டை தாக்கல்  செய்ய நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

10:13 AM IST:

10:04 AM IST:

முந்தைய வருமான வரியின் கீழ் ரூ. 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வரி விகிதம் 20%

ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது. அவர்கள் ஈட்டும் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேல் இருக்கும் குடிமக்களுக்கு அடிப்படை விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாகவும், சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு அதாவது, 80 வயது மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களுக்கு ரூ. 5 லட்சமாகவும் உள்ளது. 

10:03 AM IST:

நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்து ஒப்புதலை பெற்றார்.

10:06 AM IST:

9:41 AM IST:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2024 இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னதாக, சென்செக்ஸ் மற்றும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி ஏறுமுகத்தில் காணப்படுகிறது. சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது. நிஃப்டி 24,550க்கு மேல் வர்த்தகம் செய்து வருகிறது. காலை நிலவரப்படி சென்செக்ஸ் 172 புள்ளிகள் அல்லது 0.21% அதிகரித்து 80,673.62 - ல் வர்த்தகம் செய்தது. நிஃப்டி 51 புள்ளிகள் அல்லது 0.21% அதிகரித்து 24,560.15 ஆக இருந்தது.

9:19 AM IST:

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

9:19 AM IST:

9:14 AM IST:

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சகத்துக்கு வருகை வந்துள்ளார். தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். பின்னர் அமைச்சரவை இந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு குடியரசுத் தலைவரை சந்தித்து ஒப்புதல் பெறுவார். பின்னர் தான் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 

8:57 AM IST:

கடந்த முழு ஆண்டு பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று சீதாராமன் தாக்கல் செய்தார். டிவி பேனல்கள் மற்றும் மொபைல் போன் உதிரிபாகங்கள் விலை குறைந்த பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றது. அதேபோல சிகரெட் மற்றும் வெள்ளி நகைகள் விலை உயர்ந்தது. 

 

 

8:04 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.  இந்நிலையில் இன்றைய தினம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த அமைச்சர் என்ற மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கிறார். 

8:01 AM IST:

நரேந்திர மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். பொருளாதார ஆய்வறிக்கை குறித்த முக்கிய தகவல்கள் பற்றி பார்க்கலாம். 

இதையும் படிங்க: பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; சிறப்பு அம்சங்கள் என்ன?

7:37 AM IST:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5% இருந்து 7 சதவிகிதத்திற்குள் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

7:23 AM IST:

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள் இடம் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதி, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான மேம்பால விரைவு சாலை, தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் ஆகியவை இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

6:42 AM IST:

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய வருமான வரி விதிப்பு முறையில் வரி விலக்குக்கான உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி விதிப்பை, 25 சதவீதமாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

6:36 AM IST:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும்.