Union Budget 2024-25 LIVE Updates in Tamil : இடைக்கால பட்ஜெட் 2024-25 தாக்கலானது

Interim Union Budget 2024-25 LIVE Updates in Tamil on Finance Minister Nirmala Sitharaman's speech

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இது தேர்தல் ஆண்டு என்பதால், ஆட்சி மாற்றத்தை கையாளும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை அரசாங்க செலவினங்களை உள்ளடக்கும் தற்காலிக நிதித் திட்டமாகும்.

5:59 PM IST

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024-25 - மத்திய அரசின் செலவினங்கள் என்னென்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.

5:32 PM IST

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - 25 : மிக முக்கிய தகவல் இதோ!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.

5:04 PM IST

பாசிஸ்டுகள் தூக்கி எறியப்படுவர்: ஹேமந்த் சோரன் கைதுக்கு உதயநிதி கண்டனம்!

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்  சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

4:33 PM IST

கால்நடைப் பராமரிப்பு நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

3:49 PM IST

இதுவும் வேலைதான்: மரியாதை கோரும் பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு!

மரியாதையான நடத்தை, வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது

 

3:02 PM IST

வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட்: பிரதமர் மோடி புகழாரம்!

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

 

2:36 PM IST

“ஒரு சிறு திருத்தம்.. 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும்” - சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி

பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்

 

2:11 PM IST

Union Budget 2024: குறைந்து வரும் வேலை வாய்ப்பின்மை!!

2:11 PM IST

மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன்: ரூ.75,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்!

மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

1:33 PM IST

அரசு துறைகளுக்கு வரும் நிதி வருவாய்!!

1:32 PM IST

துறைகளுக்கு செலவிடப்படும் நிதி!!

1:22 PM IST

மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்த நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை சமன் செய்துள்ளார்

 

1:09 PM IST

சோலார் மின்சாரம் திட்டம்!!

1:05 PM IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்!!

12:46 PM IST

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி விவரங்கள்!!

12:46 PM IST

Union Budget 2024 இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிறைவு: மக்களவை ஒத்தி வைப்பு!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது

 

12:19 PM IST

இடைக்கால பட்ஜெட் ஹைலைட்ஸ்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் நகலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

12:11 PM IST

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை

இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

12:10 PM IST

பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை

பால் கொள்முதலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

12:07 PM IST

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

12:07 PM IST

மத்திய பட்ஜெட் 2024 நிறைவேறியது!!

மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 நிறைவேறியது. அவை நாளை பகல் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

12:04 PM IST

Union Budget 2024: 2024-25ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை

2024-25ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

12:01 PM IST

Union Budget 2024: கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம்.. நிர்மலா சீதாராமன்

கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம்.  சிரித்தபடி கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

12:00 PM IST

வட்டியில்லா கடன்!!

50 வருட வட்டியில்லா கடனுடன் ரூ.1 லட்சம் கோடி நிதி கருவூலம் நிறுவப்படும். இதன் நோக்கம் நீண்ட கால நிதியுதவி அல்லது குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் மறு நிதி செலுத்துவதாகும் - நிர்மலா சீதாராமன் 
 

11:59 AM IST

Union Budget 2024: வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை

வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

11:55 AM IST

Union Budget 2024: பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம்

பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம். மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர்.

11:55 AM IST

நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு!!

Union Budget 2024: நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% - நிர்மலா சீதாராமன் 

11:55 AM IST

மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:50 AM IST

விவசாய துறையில் தனியார் பங்களிப்பு

விவசாயத் துறையின் மேலும் வளர்ச்சிக்காக, அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

11:49 AM IST

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:49 AM IST

லட்சத்தீவு உள்பட சுற்றுலா வளர்ச்சி!!

உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் மேற்கொள்ளப்படும் - சீதாராமன் சீதாராமன் 

11:45 AM IST

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 

11:43 AM IST

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

11:43 AM IST

Union Budget 2024: பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டம்!!

கோவிட் கால கட்டத்தில் சவால்கள் இருந்தபோதும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்தது. மேலும் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் காட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

11:38 AM IST

மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது

மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:36 AM IST

2027ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்.

11:32 AM IST

கொரோனா பெருந்தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது.
 

11:29 AM IST

தமிழக செஸ் வீரர் பிரஞ்யானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு

தமிழக செஸ் வீரர் பிரஞ்யானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு. இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி வருவதாகவும் பெருமிதம் கொண்டுள்ளார். 

11:27 AM IST

மீண்டும் பாஜக ஆட்சி: பட்ஜெட் உரையில் நிர்மலா நம்பிக்கை!

பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

11:26 AM IST

Union Budget 2024: இளைஞர்களுக்கு கடன் உதவி!!

பிரதம மந்திரி முத்ரா யோஜனா 43 கோடி கடன்களை வழங்கியுள்ளது. தொழில் முனைவோர் நோக்கங்களுக்காக 22.5 லட்சம் கோடி. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் கிரெடிட் கேரண்டி திட்டங்கள் மூலம் நமது இளைஞர்களுக்கு உதவுகின்றன.

11:26 AM IST

10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன

 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:23 AM IST

Union Budget 2024: 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம்.. நிர்மலா சீதாராமன்

பத்து ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:23 AM IST

ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் முக்கியம்!!

ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு வகுப்பினர் எங்களுக்கு முக்கியமானவர்கள் - நிர்மலா சீதாராமன்.

11:21 AM IST

ஸ்கில் இந்தியா நிர்மலா சீதாராமன்!!

ஸ்கில் இந்தியா மிஷன் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது, 54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மற்றும் மறு திறன் அளித்துள்ளது. மேலும் 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளது. 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

11:19 AM IST

Union Budget 2024: 2047ல் புதிய இந்தியாவை படைப்போம்! நிதியமைச்சர் நம்பிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

11:18 AM IST

சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம்..

சமூகநீதி என்பது முன்பு வெறும் அரசியல் முழக்கமாக இருந்தது. அதனை நிறைவேற்றிக் காட்டியுள்ளது இந்த அரசுதான். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம்.

11:15 AM IST

மீண்டும் ஆட்சிக்கு வருவோம் - நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளால் மீண்டும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

11:12 AM IST

வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்... நிர்மலா சீதாராமன்

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என இடைக்கால பட்ஜெட் உரையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

11:11 AM IST

பட்ஜெட் 2024 நேரலை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!!

11:11 AM IST

2047க்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்

இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க உழைத்து வருகிறோம். அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்ட  சமூக நீதி என்பதை திட்டங்களுக்கான தாரக மந்திரமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பணிகளுக்காக மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள்: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:10 AM IST

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. 2014ம் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது என நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

11:08 AM IST

இந்தியா பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஏழை மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்

11:03 AM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை துவக்கம்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை துவக்கினார்

10:56 AM IST

வருமான வரி 2024-25 எதிர்பார்ப்புகள்!!

* நிலையான வருமான வரி விலக்கில் உயர்வு
* புதிய வருமான வரியின் கீழ் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) சேர்த்தல்
* புதிய வருமான வரியின் கீழ் பிரிவு 80C/பிரிவு 80C வரம்பை உயர்த்தல் 
வீட்டுக் கடன் வட்டிக்கான வரம்பு உயர்வு 
* பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் ஆண்டு ஒன்றுக்கு தாங்கள் செலுத்தும் வரியின் மீதான வரியை  80TTA-ன் கீழ் குறைக்க வேண்டும் என்று வரி செலுத்துவோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
* தற்போது ஆண்டுக்கு 2,50,000 வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை 
* 2,50,000 - 5,00,000 வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு தற்போது 5% வரி உள்ளது.
* 5,00,000- 10,00,000 வரை ஆண்டுக்கு வருமானம் பெறுபவர்கள் 20% வரி செலுத்தி வருகின்றனர் 
* 15,00,000த்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்கள் தற்போது 30% வரி செலுத்தி வருகின்றனர். இதை 20,00,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

10:33 AM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டினார். 

10:27 AM IST

புதிய பொருளாதாரக் கொள்கை இருக்காது!!

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கும்  நிலையில், இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், எந்தவொரு புதிய கொள்கை மாற்றங்களையோ அல்லது நிதி மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு குறிப்பிட்டது போல, பட்ஜெட் முக்கியமாக நீண்டகால பொருளாதார பயன்பாடுகளைக் காட்டிலும் உடனடி செலவினங்களை கொண்டதாக இருக்கும். 

10:21 AM IST

பட்ஜெட் 2024-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது வழக்கமாக ஒவ்வொரு முறையும் இருக்கும் நடைமுறைதான். 

10:17 AM IST

இன்று 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது குழுவுடன்!!

10:17 AM IST

பட்ஜெட் தாக்கல் செய்ய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரெடி

இன்று காலை 11 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக  நிதியமைச்சக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும்.


 

10:05 AM IST

நிதியமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் குழு புகைப்படம்!!

10:01 AM IST

பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

9:47 AM IST

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை என்ன?

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.9.82 லட்சம் கோடியாக அல்லது 2023 டிசம்பர் இறுதியில் ஆண்டு பட்ஜெட் இலக்கில் 55 சதவீதத்தை தொட்டது என்று சிஏஜி பொதுக் கட்டுப்பாட்டுத் தலைவர் புதன்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவித்து இருந்தார். 

கடந்த ஆண்டு இதே காலத்தில், பற்றாக்குறை 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8 சதவீதமாக இருந்தது.

2023-24 ஆம் ஆண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023 நிலவரப்படி, அரசின் மொத்த வருவாய் ரூ. 20.71 லட்சம் கோடியாக இருந்தது 
 

9:35 AM IST

பெண்களுக்கான நிதி உதவி திட்டங்கள் அறிவிப்பு வெளியாகுமா?

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு, விவசாயிகளுக்கான உரமானியம், பயிர் காப்பீடு, பெண்களுக்கான நிதி உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

9:32 AM IST

இந்தியாவின் நிதிநிலை ஒரு பார்வை!!

9:17 AM IST

பிரதமர் மோடி என்ன சொன்னார்?

''உங்களுக்கு தெரியும், பாரம்பரியமாக, தேர்தல் நெருங்கும்போது, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. இந்த பாரம்பரியத்தை நாங்களும் கடைப்பிடிப்போம். இந்த முறை, நிர்மலா ஜி சில வழிகாட்டுதலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் ”என்று பிரதமர் பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

9:13 AM IST

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்!!

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% விரிவடைந்த இந்தியப் பொருளாதாரம், மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் 7.3% வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக கருதப்படுகிறது. அரசின் கணிப்புப்படி, 2024-25ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9:01 AM IST

இன்று தாக்கலாகிறது மத்திய இடைக்கால பட்ஜெட்.. நேரலையில் காணலாம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும். மத்திய இடைக்கால பட்ஜெட்டை தொடர்பான நேரலையை ஏசியா நெட்டில் காணலாம். 

8:57 AM IST

ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!!

தற்போது நிதியமைச்சகத்துக்கு வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நுழைவுவாயில் 2-ல் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதையடுத்து 8.50 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.

8:51 AM IST

பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன்

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய நிதியமைச்சகத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து சேர்ந்தார். 

8:41 AM IST

பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா ரூ.9000ஆக உயருகிறது?

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆண்டுக்கு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக அல்லது 9000 ரூபாயாக கூட உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

8:22 AM IST

புதிய நாடாளுமன்ற தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டின் போது புதிய அறிவிப்புகளுக்கு பதிலாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது. 

7:54 AM IST

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா..?

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்க வாய்ப்புள்ளது.  கடந்த 621 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

7:16 AM IST

இடைக்கால பட்ஜெட்டில்.. புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது?

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். 
 

6:42 AM IST

மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்த நிர்மலா சீதாராமன்

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார். 

6:23 AM IST

இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை 2020ஆம் ஆண்டு வாசித்த நிர்மலா சீதாராமன்

இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை 2020ஆம் ஆண்டு வாசிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த பட்ஜெட் உரை, சுமார் 2 மணி 42 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

8:59 PM IST

பொருளாதார நிபுணர் சஞ்சிதா முகர்ஜி கருத்து!

"அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படும் வகையில் நிறைய செலவுகளைச் செய்து பொதுத்துறையினரை ஊக்கப்படுத்தியுள்ளது. இதைத் தொடர வேண்டும்" என்றும் பொருளாதார நிபுணர் சஞ்சிதா முகர்ஜி கூறியுள்ளார்.
 

8:59 PM IST

பொருளாதார வல்லுநர் வினய் ரகுநாத் நம்பிக்கை!

கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கை கட்டமைப்பை இந்த பட்ஜெட் தொடரும்" என் பொருளாதார வல்லுநர் வினய் ரகுநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைப்பது, குறைந்த கார்ப்பரேட் வரியைப் பெறுவது ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளன எனக் கூறியுள்ளார்.
 

8:58 PM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் இடைக்கால பட்ஜெட்!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக இது அமைய உள்ளது. தேர்தல் ஆண்டாக இருப்பதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். 


 

5:59 PM IST:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்.

5:32 PM IST:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிப்ரவரி 1ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார்.

5:04 PM IST:

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்  சோரன் கைதுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

4:33 PM IST:

கால்நடைப் பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

3:49 PM IST:

மரியாதையான நடத்தை, வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என பாலியல் தொழிலாளர்கள் உரிமைக் குழு வலியுறுத்தியுள்ளது

 

3:02 PM IST:

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட், வளர்ச்சியடைந்த பாரத்திற்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

 

2:36 PM IST:

பட்ஜெட் உரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்

 

2:11 PM IST:

2:11 PM IST:

மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கு சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், ரூ.75,000 கோடி வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

 

1:33 PM IST:

1:32 PM IST:

1:22 PM IST:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மொரார்ஜி தேசாயின் சாதணையை சமன் செய்துள்ளார்

 

1:09 PM IST:

1:05 PM IST:

12:46 PM IST:

12:46 PM IST:

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது

 

12:19 PM IST:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் நகலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

12:11 PM IST:

இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

12:10 PM IST:

பால் கொள்முதலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

12:07 PM IST:

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

12:07 PM IST:

மக்களவையில் மத்திய பட்ஜெட் 2024 நிறைவேறியது. அவை நாளை பகல் 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

12:04 PM IST:

2024-25ஆம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

12:01 PM IST:

கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம்.  சிரித்தபடி கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

12:00 PM IST:

50 வருட வட்டியில்லா கடனுடன் ரூ.1 லட்சம் கோடி நிதி கருவூலம் நிறுவப்படும். இதன் நோக்கம் நீண்ட கால நிதியுதவி அல்லது குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களுடன் மறு நிதி செலுத்துவதாகும் - நிர்மலா சீதாராமன் 
 

11:59 AM IST:

வருமான வரி விதிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்திய வரியை திரும்ப பெறுவதற்கான கால அளவு 2013ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

11:55 AM IST:

பெண் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்த திட்டம். மத்திய அரசின் திட்டங்களால் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக ஆகியுள்ளனர்.

11:55 AM IST:

Union Budget 2024: நிதிப் பற்றாக்குறையின் திருத்தப்பட்ட மதிப்பீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% - நிர்மலா சீதாராமன் 

11:55 AM IST:

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:50 AM IST:

விவசாயத் துறையின் மேலும் வளர்ச்சிக்காக, அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

11:49 AM IST:

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயது பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது.

11:49 AM IST:

உள்நாட்டு சுற்றுலாவுக்கான ஆர்வத்தை நிவர்த்தி செய்ய, துறைமுக இணைப்பு, சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்கள் லட்சத்தீவு உள்ளிட்ட நமது தீவுகளில் மேற்கொள்ளப்படும் - சீதாராமன் சீதாராமன் 

11:45 AM IST:

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும். 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 

11:43 AM IST:

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மேற்கூரை வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

11:43 AM IST:

கோவிட் கால கட்டத்தில் சவால்கள் இருந்தபோதும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்தது. மேலும் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி வீடுகள் காட்டப்படும் - நிர்மலா சீதாராமன்

11:38 AM IST:

மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:36 AM IST:

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது. 2027ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்.

11:32 AM IST:

மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது.
 

11:29 AM IST:

தமிழக செஸ் வீரர் பிரஞ்யானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு. இந்தியா விளையாட்டு துறையில் முன்னேறி வருவதாகவும் பெருமிதம் கொண்டுள்ளார். 

11:27 AM IST:

பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

11:26 AM IST:

பிரதம மந்திரி முத்ரா யோஜனா 43 கோடி கடன்களை வழங்கியுள்ளது. தொழில் முனைவோர் நோக்கங்களுக்காக 22.5 லட்சம் கோடி. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் கிரெடிட் கேரண்டி திட்டங்கள் மூலம் நமது இளைஞர்களுக்கு உதவுகின்றன.

11:26 AM IST:

 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:28 AM IST:

பத்து ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது. 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

11:23 AM IST:

ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கு வகுப்பினர் எங்களுக்கு முக்கியமானவர்கள் - நிர்மலா சீதாராமன்.

11:21 AM IST:

ஸ்கில் இந்தியா மிஷன் 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது, 54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மற்றும் மறு திறன் அளித்துள்ளது. மேலும் 3000 புதிய ஐடிஐகளை நிறுவியுள்ளது. 7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

11:28 AM IST:

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம் என நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

11:18 AM IST:

சமூகநீதி என்பது முன்பு வெறும் அரசியல் முழக்கமாக இருந்தது. அதனை நிறைவேற்றிக் காட்டியுள்ளது இந்த அரசுதான். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம். சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம்.

11:15 AM IST:

மத்திய அரசின் வளர்ச்சி திட்டப் பணிகளால் மீண்டும் மக்கள் எங்களை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

11:12 AM IST:

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என இடைக்கால பட்ஜெட் உரையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

11:11 AM IST:

11:11 AM IST:

இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க உழைத்து வருகிறோம். அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்ட  சமூக நீதி என்பதை திட்டங்களுக்கான தாரக மந்திரமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பணிகளுக்காக மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள்: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:10 AM IST:

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. 2014ம் மோடி பிரதமராக பதவியேற்கும் போது பொருளாதாரத்தில் இந்தியா பின்தங்கியிருந்தது என நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் உரையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். 

11:08 AM IST:

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஏழை மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்

11:03 AM IST:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை துவக்கினார்

11:52 AM IST:

* நிலையான வருமான வரி விலக்கில் உயர்வு
* புதிய வருமான வரியின் கீழ் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) சேர்த்தல்
* புதிய வருமான வரியின் கீழ் பிரிவு 80C/பிரிவு 80C வரம்பை உயர்த்தல் 
வீட்டுக் கடன் வட்டிக்கான வரம்பு உயர்வு 
* பிக்சட் டெபாசிட் செய்பவர்கள் ஆண்டு ஒன்றுக்கு தாங்கள் செலுத்தும் வரியின் மீதான வரியை  80TTA-ன் கீழ் குறைக்க வேண்டும் என்று வரி செலுத்துவோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வரியை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்பது இவர்களது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
* தற்போது ஆண்டுக்கு 2,50,000 வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை 
* 2,50,000 - 5,00,000 வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு தற்போது 5% வரி உள்ளது.
* 5,00,000- 10,00,000 வரை ஆண்டுக்கு வருமானம் பெறுபவர்கள் 20% வரி செலுத்தி வருகின்றனர் 
* 15,00,000த்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்கள் தற்போது 30% வரி செலுத்தி வருகின்றனர். இதை 20,00,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

10:52 AM IST:

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டினார். 

10:27 AM IST:

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு இருக்கும்  நிலையில், இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், எந்தவொரு புதிய கொள்கை மாற்றங்களையோ அல்லது நிதி மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு குறிப்பிட்டது போல, பட்ஜெட் முக்கியமாக நீண்டகால பொருளாதார பயன்பாடுகளைக் காட்டிலும் உடனடி செலவினங்களை கொண்டதாக இருக்கும். 

10:21 AM IST:

பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது வழக்கமாக ஒவ்வொரு முறையும் இருக்கும் நடைமுறைதான். 

10:17 AM IST:

10:55 AM IST:

இன்று காலை 11 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக  நிதியமைச்சக அதிகாரிகளுடன் நிதியமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும்.


 

10:05 AM IST:

10:01 AM IST:

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பான ஆவணங்கள் நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

9:47 AM IST:

மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.9.82 லட்சம் கோடியாக அல்லது 2023 டிசம்பர் இறுதியில் ஆண்டு பட்ஜெட் இலக்கில் 55 சதவீதத்தை தொட்டது என்று சிஏஜி பொதுக் கட்டுப்பாட்டுத் தலைவர் புதன்கிழமை வெளியிட்ட தகவலில் தெரிவித்து இருந்தார். 

கடந்த ஆண்டு இதே காலத்தில், பற்றாக்குறை 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8 சதவீதமாக இருந்தது.

2023-24 ஆம் ஆண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.17.86 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2023 நிலவரப்படி, அரசின் மொத்த வருவாய் ரூ. 20.71 லட்சம் கோடியாக இருந்தது 
 

9:35 AM IST:

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு, விவசாயிகளுக்கான உரமானியம், பயிர் காப்பீடு, பெண்களுக்கான நிதி உதவி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

9:32 AM IST:

9:17 AM IST:

''உங்களுக்கு தெரியும், பாரம்பரியமாக, தேர்தல் நெருங்கும்போது, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. இந்த பாரம்பரியத்தை நாங்களும் கடைப்பிடிப்போம். இந்த முறை, நிர்மலா ஜி சில வழிகாட்டுதலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் ”என்று பிரதமர் பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

9:13 AM IST:

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% விரிவடைந்த இந்தியப் பொருளாதாரம், மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டில் 7.3% வளர்ச்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக கருதப்படுகிறது. அரசின் கணிப்புப்படி, 2024-25ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9:01 AM IST:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இதுவாகும். மத்திய இடைக்கால பட்ஜெட்டை தொடர்பான நேரலையை ஏசியா நெட்டில் காணலாம். 

8:57 AM IST:

தற்போது நிதியமைச்சகத்துக்கு வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நுழைவுவாயில் 2-ல் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதையடுத்து 8.50 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.

8:52 AM IST:

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய நிதியமைச்சகத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து சேர்ந்தார். 

8:41 AM IST:

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆண்டுக்கு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக அல்லது 9000 ரூபாயாக கூட உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

8:22 AM IST:

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டின் போது புதிய அறிவிப்புகளுக்கு பதிலாக, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது. 

7:54 AM IST:

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் அவற்றின் மீதான வரியை குறைக்க வாய்ப்புள்ளது.  கடந்த 621 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

7:16 AM IST:

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களுக்கான அறிக்கையாகவே இருக்கும். புதிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். 
 

6:42 AM IST:

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் மட்டுமே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார். 

6:23 AM IST:

இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரை 2020ஆம் ஆண்டு வாசிக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அந்த பட்ஜெட் உரை, சுமார் 2 மணி 42 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.

8:59 PM IST:

"அரசாங்கம் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படும் வகையில் நிறைய செலவுகளைச் செய்து பொதுத்துறையினரை ஊக்கப்படுத்தியுள்ளது. இதைத் தொடர வேண்டும்" என்றும் பொருளாதார நிபுணர் சஞ்சிதா முகர்ஜி கூறியுள்ளார்.
 

8:59 PM IST:

கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பின்பற்றி வரும் கொள்கை கட்டமைப்பை இந்த பட்ஜெட் தொடரும்" என் பொருளாதார வல்லுநர் வினய் ரகுநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாகன உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைப்பது, குறைந்த கார்ப்பரேட் வரியைப் பெறுவது ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளன எனக் கூறியுள்ளார்.
 

8:58 PM IST:

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக இது அமைய உள்ளது. தேர்தல் ஆண்டாக இருப்பதால், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் இடைக்கால பட்ஜெட் இதுவாகும்.