Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
- துலாம் ராசி நேயர்களே, இன்றைய தினம் சமநிலையற்ற உணர்வு இருக்கலாம்.
- எனவே அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று நினைக்காமல் அமைதியாக இருங்கள்.
- அமைதியான அணுகுமுறை தேவை. அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்த்து நிதானமாக செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
- மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை விட அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது பயனுள்ளதாக இருக்கும்.
- சிறிது நேரம் ஒதுக்கி, சுயபரிசோதனை செய்து கொள்வது உங்களை நீங்களே அறிந்து கொள்ள உதவும்.
நிதி நிலைமை:
- நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அமைதியுடன் எடுக்க வேண்டும்.
- உணர்ச்சிவசப்பட்டு செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள்.
- கடன் கொடுப்பது வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.
- ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் அவசரமில்லாமல் நேரம் எடுத்துக் கொள்வது நல்லது.
- பட்ஜெட்டை பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
- சேமிப்பு பழக்கத்தை கடைபிடிக்க தொடங்குங்கள்.
- உங்களுக்கு அக்கறை உள்ள ஒருவரிடம் இருந்து எதிர்பாராத உதவி அல்லது ஆலோசனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை:
- உறவுகளில் நேர்மையை கடைபிடியுங்கள். பேசும் பொழுது பதற்றம் வேண்டாம்.
- எந்த சூழ்நிலையானாலும் அமைதியாக இருங்கள்.
- கனிவான வார்த்தை மூலம் பிணைப்பை அதிகப்படுத்தலாம்.
- குடும்பத்தினரிடம் பேசும் பொழுது பொறுமையை கையாள வேண்டியது அவசியம்.
- அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது. சிறிய தவறான புரிதல் கூட பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
- எனவே இன்றைய நாள் உங்கள் எல்லைகளை வகுத்துக் கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.
பரிகாரங்கள்:
- இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் துர்க்கை அம்மனை வழிபடுங்கள்.
- துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது நற்பலன்களைக் கூட்டும்.
- அம்மன் ஆலயங்களுக்குச் சென்று பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
- அங்காளம்மனை வழிபடுங்கள்.
- ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
- இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source



