Today Rasi Palan : செப்டம்பர் 17, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மகர ராசி நேயர்களே இன்று உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புது முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சாதகமான நேரம். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு. மனதில் சிறு குழப்பங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர்கள்
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் செய்வதற்கு முன்பு அவசரப்பட வேண்டாம். நிதி சார்ந்த விஷயங்களில் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். நிபுணர்களை கலந்தாலோசித்து அதன் பின்னர் முதலீடுகளை செய்யலாம். பண விஷயத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள் உங்கள் துணையுடன் நல்ல புரிதல் ஏற்படும் அன்பை வெளிப்படுத்த இது நல்ல நாளாகும் புதிய உறவுகள் மலர வாய்ப்பு உள்ளது நண்பர்களுடன் வெளியே செல்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும்.
பரிகாரங்கள்:
நீங்கள் செய்யும் காரியங்கள் தடையின்றி நடைபெற மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நல்லது. விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். வசதி குறைந்தவர்களுக்கு உணவு அல்லது உடைகள் வழங்குவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். “ஓம் நமோ வாசுதேவாய நமஹ” என்கிற மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது நல்ல பலன்களைத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
