Today Rasi Palan : அக்டோபர் 08, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் தெளிவாகவும் ஆக்கபூர்வமான முடிவுகளையும் எடுப்பீர்கள். 
  • வேலையில் கூடுதலை பொறுப்புகளை ஏற்கச்சொல்லி உங்களை மேலதிகாரிகள் வற்புறுத்தக்கூடும். 
  • எல்லாவற்றிற்கும் சம்மதிக்காமல் முக்கிய பணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுங்கள். 
  • அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 
  • உங்கள் தனிப்பட்ட நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். 
  • யாருக்கும் தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.

நிதி நிலைமை:

  • நிதி சார்ந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் பொழுது கவனத்துடன் செயல்படுங்கள். 
  • உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை செலவழித்து பிறருக்கு நல்லவர் என்று காட்டிக் கொள்வதை தவிர்க்கவும். 
  • இன்று நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 
  • சிறிய அளவிலான சேமிப்பு இழப்புகள் இருந்தால் அவற்றை அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். 
  • உங்கள் பட்ஜெட்டிற்கு மீறிய செலவுகளை செய்ய வேண்டாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • இன்று உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால் அதை தெளிவாக பேசி புரிய வையுங்கள். 
  • அமைதி காப்பது மனக்கசப்பை மேலும் அதிகப்படுத்தலாம். து
  • ணையிடம் கோபத்துடன் பேசாமல், தெளிவுடன் பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். 
  • திருமணமானவர்கள் குடும்ப பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். 
  • அவசரப்படாமல், வார்த்தைகளில் கவனத்துடன் பேசுங்கள்.

பரிகாரங்கள்:

  • மகர ராசியின் அதிபதியான சனி பகவானை இன்றைய நாளில் வணங்குவது சிறந்தது. 
  • தடைகள் நீங்க விநாயகரை வழிபடுவது நன்மை தரும். 
  • தண்ணீர், சர்க்கரை, நெய், பால் ஆகியவற்றை கலந்து அரச மரத்தின் வேருக்கு வழங்குவதால் பொருளாதார செழிப்பு அதிகரிக்கும். 
  • இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.