Today Rasi Palan : அக்டோபர் 04, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். மனதில் இருந்த சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். உங்கள் திட்டங்கள் மற்றும் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமையும் உழைப்பும் அங்கீகரிக்கப்படலாம். புதிய பொறுப்புகள், பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறலாம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இன்று நன்றாக இருக்கும். எதிர்பாராத அல்லது கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் உங்களிடம் நிலைத்து நிற்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். எனவே பண விஷயங்களில் அக்கறை தேவை. புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னர் ஆலோசனைகள் பெறுவது. அனாவசியமாக செலவழிப்பதை விட திட்டமிடுவது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது. துணையுடன் ஆழமான உரையாடல்களை செய்வீர்கள். இதன் மூலமாக பிணைப்பு அதிகரிக்கும். பேச்சாற்றல் மற்றும் அறிவுத் திறமையால் இன்று பலரையும் ஈர்ப்பீர்கள்.
பரிகாரங்கள்:
- சனிக்கிழமை என்பதால் சனிபகவானை வணங்கலாம்.
- விநாயகர் பெருமானை வணங்குவது காரியத் தடைகளை நீக்க உதவும்.
- ஆஞ்சநேயரை வழிபடுவது மன தைரியத்தை அதிகரிக்கும்.
- எதிர்பார்த்த பண வரவு, மன மகிழ்ச்சி கிடைக்க குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
- இயலாதவர்களுக்கு உதவுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
