காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கல்லூரி மாணவி கதறல்! வீடியோ வைரல்!

Oct 3, 2018, 5:26 PM IST

வேர்கிளம்பி அருகே கண்ணனூரை சேர்ந்தவர் சஜூ  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெரில் என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பெரில் சுங்கான்கடையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 

பிரச்னை விஸ்வரூபம் எடுக்கவே காதலனை கொன்று விடுவதாக  பெண் வீட்டார் மிரட்டியுள்ளனர். இதனால் கல்லூரிக்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்துள்ளனர். தற்போது பெண் வீட்டார் பெண்ணை அடித்து துன்புறுத்தி "சஜூவை தான் காதலிக்க வில்லை எனவும்  அவர் தான் தன் பின்னால் வந்து தொல்லை கொடுப்பதாகவும்"  எழுதி கேட்டு அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். 

காதலனை கூலி படை ஏவி கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜனநாயக நாட்டில் தன் வாழ்க்கை துணையை கூட தேர்ந்தெடுக்க சுதந்தரம் இல்லையா என்ற கேள்வியே பொதுமக்களிடம் எழுகிறது. 

கௌசல்யா - சுந்தர்  கொலை, அபிராமி- பிரானே  கொலை போன்ற கொலைகள் அரங்கேறிய பின்னரும் இப்பேற்பட்ட மிரட்டல்களை செயலில் செய்து முடிக்கும் முன் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து இருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பொறியியல் மாணவி வீடியோ மூலம் கோரிக்கை 
வைத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  ஒரு உயிர் பறி போகும் முன் காவல் துறை துரித நடவடிக்கை எடுத்து காதலர்களுக்கு பாதுகாப்பு அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.