52 பேரை பலி வாங்கிய பேருந்து விபத்து... அதிரவைக்கும் வீடியோ

Sep 11, 2018, 5:26 PM IST

தெலங்கானா மாநிலம் ஜெகித்யாலா அருகே உள்ள கொண்டகட்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்திருப்பதாக மாவட்ட எஸ்பி உறுதி செய்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.