Sep 29, 2018, 3:03 PM IST
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. முன்னதாக இந்தோனேஷியாவில் சுலாவேசி தீவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன.