யோவ்... உக்காருயா... கல்யாண வூடாட்டம்!!! வைகோவை கலாய்த்த துரைமுருகன்...

Oct 10, 2018, 11:07 AM IST

சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோவை  அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வைகோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார் வைகோ.

அவரை திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் சந்தித்தனர். அப்போது வைகோவை சந்திக்க மேலும் பல நிர்வாகிகள் திருமண மண்டபத்திற்கு குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை வைகோ எழுந்து நின்று வரவேற்றார். இதனால் கடுப்பான துரைமுருகன், யோவ் உட்காருய்யா, சும்மா கல்யாண வீடாட்டம் எழுந்து எழுந்து எல்லாரையும் வா.. வான்னுகிட்டு என கலாய்த்தார். இதனால் அந்த இடமே கலகலப்பாகி சிரிப்பலை எழுந்தது.