அண்ணே.!! ஹிந்தி மொழியில் பேசுங்க.. இப்போ பாரு!! அதிமுக கரூர் தொகுதி வேட்பாளர் தங்கவேலு பேச்சு!

Mar 24, 2024, 10:35 AM IST

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கரூர் வேட்பாளர் தங்கவேலு விராலிமலையில் பிரசித்தி பெற்ற தெய்வமான மெய் கண்ணுடையாள் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜல்லிக்கட்டு சிலைக்கு அணிவித்து அதிமுக தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “எனக்காக வேலை செய்ய வேண்டாம். இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக வேலை செய்யுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது கூட்டத்திலிருந்து ஹிந்தி மொழியில் பேச சொல்லி கோரிக்கையை வைத்தனர். உடனடியாக கரூர் வேட்பாளர் தங்கவேலு ஹிந்தி மொழியில் பேசினார். அந்த கோரிக்கை நிறைவேற்றிய நிகழ்வு அங்கு மேலும் சிரிப்பழையை ஏற்படுத்தியது.