விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான பங்களாக்கள் முதல் தனியார் ஜெட் விமானங்கள் வரை, பிரபலங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகின்றனர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி, பிரைவேட் ஜெட், சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
தனியார் ஜெட் விமானம் வைத்திருந்த முதல் தமிழ் நடிகை யார் தெரியுமா? அது வேறு யாருமல்ல நடிகை கே.ஆர்.விஜயா தான். 70 மற்றும் 80 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். 70களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை என்றால் அது கே.ஆர். விஜயா தான்.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கினார். கே.ஆர்.விஜயா 1963 இல் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் பிரபலமான முகமாக இருந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்..
1963 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் கற்பகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வருகிறார். சமீபத்தில் 75 வயதை எட்டிய கே.ஆர்.விஜயா கடைசியாக 2023ல் வெளியான விஷனகுடி படத்தில் நடித்தார்.
புன்னகை அரசி, தெய்வநாயகி என பல பெயர்களால் அழைக்கப்பட்ட, கே.ஆர்.விஜயா, 70, 80களில் இயக்குனர்களின் முதல் தேர்வாக இருந்தார். அவரின் கால்ஷீட்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். 70களில் அம்மன் கதாப்பாத்திரம் என்றால் அதில் கண்டிப்பாக கே.ஆர். விஜயா தான் நடிப்பார். திரைப்படங்கள் தவிர, அவர் இந்தியா மற்றும் இலங்கையில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி மற்றும் குடும்பம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 500 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கே.ஆர்.விஜயாவின் தங்கையும், நடிகையுமான கே.ஆர். வத்சலா பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் பேசிய அவர் “ கே.ஆர். விஜயாவிடம் பிரைவேட் ஜெட் இருந்தது.
KR Vijaya
இதுதவிர 4 கப்பல்கள் இருந்தன. அவர் சில நேரங்களில் விமானத்தில் தான் படப்பிடிப்புக்கு வருவார். ஆனால் இந்த சொத்துக்கள் இருப்பதால் அவருக்கு எந்த கர்வமும் இருந்ததில்லை” என்று கூறினார்.