கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமண நாளில் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இருந்து வெளியான.. ரயிலின் ஒலிகள் பாடல்

Sep 13, 2023, 5:37 PM IST

இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில், இயக்குனர் பா. ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடக்ஷன் மூலம் தயாரித்துள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இந்த படத்தில், அசோக் செல்வன் ஹீரோவாக நடக்க, ஹீரோயினாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் போது, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே ஏற்பட்ட நட்பே இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர காரணமாக அமைந்தது. இப்படத்தின் மூலம் காதலிக்க துவங்கிய இவர்கள் இருவரும் இன்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்நிலையில், சற்று முன்னர் கீர்த்தி மற்றும் அசோக் செல்வன் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இருந்து, ரயிலின் ஒலிகள் என்கிற காதல் லிரிக்கல் பாடலை பட குழு வெளியிட்டுள்ளது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவைப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை பிரதீப் குமார், சக்தி ஸ்ரீ கோபாலன் ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். உமாதேவி உமாதேவி இந்த பாடலை எழுதியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.