Nov 27, 2019, 1:03 PM IST
கன்னியாகுமரியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டு இருந்தனர் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சகாய வால்டர், ஜோசப் ரவீந்திரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்துள்ளனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவலருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் இருவரையும் தாக்கிய போலீசார், கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.காவலர்களின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.