
சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக பேசுகிறார். இன்று தமிழர்களுடைய அடையாளம் என்பது முருகன், விபூதி, கோவில்கள் ஆகும். ஆனால் திராவிட மாடல் என்று சொல்லி இவற்றையெல்லாம் பிரித்து ஆன்மாவையே பிரித்து எடுத்துவிட்டு திமுக அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.