அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

Published : Oct 02, 2022, 05:00 PM IST

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
 

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு மகப்பேறு பிரிவில் இருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.  திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு நேற்று அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இந்த குழந்தையை பார்ப்பதற்கு இவரது அண்டை வீட்டை சேர்ந்த கண்ணன் என்பவர் வந்துள்ளார். இவருக்கு வயது 50 இவருக்கும் சுரேஷ் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:IAS அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அழகிரியின் பேரன்; வீடியோ வைரல்

இதனிடையே நேற்று மருத்துவமனைக்கு வந்த கண்ணனுக்கும் சுரேஷ்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். மகப்பேறு பிரிவு முன்பு நடைபெற்ற இந்த சண்டையால், அங்கிருந்தவர் பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் நகர் போலீசார் தகராறு எற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை முன்பு இருவர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி