அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

அரசு மருத்துவமனை முன்பு கத்தியால் ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்திக் கொண்டு தகராறு.. சிசிடிவி காட்சி

Published : Oct 02, 2022, 05:00 PM IST

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
 

திருவாரூரில் அரசு மருத்துவமனையில் ஒருவரை ஒருவரை மாறி மாறி கத்தியால் குத்தி கொல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு மகப்பேறு பிரிவில் இருவர் மோதிக்கொள்ளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.  திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு நேற்று அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இந்த குழந்தையை பார்ப்பதற்கு இவரது அண்டை வீட்டை சேர்ந்த கண்ணன் என்பவர் வந்துள்ளார். இவருக்கு வயது 50 இவருக்கும் சுரேஷ் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:IAS அதிகாரியின் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசிய அழகிரியின் பேரன்; வீடியோ வைரல்

இதனிடையே நேற்று மருத்துவமனைக்கு வந்த கண்ணனுக்கும் சுரேஷ்க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். மகப்பேறு பிரிவு முன்பு நடைபெற்ற இந்த சண்டையால், அங்கிருந்தவர் பயந்து அலறி அடித்து ஓடியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் நகர் போலீசார் தகராறு எற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை முன்பு இருவர் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10:32என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள்! – தொல். திருமாவளவன் அதிரடி பேட்டி!
07:41திருச்செந்தூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்: மத்திய அமைச்சர் எல். முருகன் அதிரடி ஆய்வு!
07:18போலியோ இல்லாத தமிழகமே இலக்கு!–மதுரையில் சொட்டு மருந்து வழங்கி அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி!
07:38குழந்தைகளின் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய முதல்வர் விஜய்..! சென்னையில் தேசிய போலியோ முகாம் துவக்கம்!
02:57இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?