AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 10:50 PM IST

AIADMK Campaign : சிவகங்கை மாவட்டம் அருகே மக்களவை வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் ஆரத்தி என்ற பெயரில் பெண்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமானோர் சிவகங்கை சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை அருகே கொட்டகுடி, குமாரபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு கேட்டு சென்றபோது ஏராளமான பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளர் சார்பாக தட்டுகளில் பணத்தினை பட்டுவாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு வீடியோ பதிவு செய்து வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற பணம் பட்டுவாடு செய்வதை அவர்கள் கண்டு கொள்ளவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது, வாங்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கை அருகே ஆரத்தி என்ற பெயரில் பணம் கொடுப்பவர்கள் மீதும் அதனைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:26"Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! 😎
04:183 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!
08:49முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:13அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!
02:41Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?
08:21"மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"
05:53புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
03:09சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!
04:13"70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!
09:33"நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்
Read more