AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 10:50 PM IST

AIADMK Campaign : சிவகங்கை மாவட்டம் அருகே மக்களவை வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் ஆரத்தி என்ற பெயரில் பெண்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமானோர் சிவகங்கை சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை அருகே கொட்டகுடி, குமாரபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு கேட்டு சென்றபோது ஏராளமான பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளர் சார்பாக தட்டுகளில் பணத்தினை பட்டுவாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு வீடியோ பதிவு செய்து வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற பணம் பட்டுவாடு செய்வதை அவர்கள் கண்டு கொள்ளவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது, வாங்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கை அருகே ஆரத்தி என்ற பெயரில் பணம் கொடுப்பவர்கள் மீதும் அதனைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
Read more