AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

AIADMK Campaign : ஆரத்திக்கு பணம் கொடுக்கும் அதிமுகவினர்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - குமுறும் சமூக ஆர்வலர்கள்!

Ansgar R |  
Published : Mar 29, 2024, 10:50 PM IST

AIADMK Campaign : சிவகங்கை மாவட்டம் அருகே மக்களவை வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் ஆரத்தி என்ற பெயரில் பெண்களுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில், ஏராளமானோர் சிவகங்கை சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சிவகங்கை அருகே கொட்டகுடி, குமாரபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு கேட்டு சென்றபோது ஏராளமான பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் ஆதரவாளர்கள் வேட்பாளர் சார்பாக தட்டுகளில் பணத்தினை பட்டுவாடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு அதிகாரி தலைமையில் கண்காணிப்புக் குழு வீடியோ பதிவு செய்து வருகிறது. இருந்தபோதிலும் இதுபோன்ற பணம் பட்டுவாடு செய்வதை அவர்கள் கண்டு கொள்ளவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது, வாங்க கூடாது என்று தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சிவகங்கை அருகே ஆரத்தி என்ற பெயரில் பணம் கொடுப்பவர்கள் மீதும் அதனைக் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more