Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!

Raid : தேர்தல் நேரம்.. பணம் பதுக்கி வைத்ததாக தகவல் - முன்னாள் திமுக MLA ஆறுமுகத்தின் உறவினர் வீட்டில் சோதனை!

Ansgar R |  
Published : Apr 05, 2024, 11:21 PM IST

Income Tax Raid : தேர்தல் நேரத்தில் ஒரு பிரபலத்தின் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபரும், திமுக அபிமானியுமான திருச்செங்கோடு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினருமான, தனசேகர் என்பவர் வீட்டில் தேர்தலுக்கான பணம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமாவுக்கு வந்த  ரகசிய தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வருமானவரித்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தனசேகர் என்பவரது வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுவரை இரண்டு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன் இவர் வீட்டில் தேர்தலுக்கு பணம் கொடுக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வருமானவரித்துறைக்கு தனசேகர் வீட்டில் சோதனையிட பரிந்துரை செய்தார். 

திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை முதல் 12க்கும் மேற்பட்ட  வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் அவரது வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. தற்போது சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் நிறைவில் தான் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது முழுமையாக தெரிய வரும். 

இந்த தனசேகர் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரியில் நிர்வாகியாக உள்ளார் என்பதும், இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டிமடை புதூரில் நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி