Swimming : இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் போட்டி.. 10 மணி நேரத்தில் கடந்து சாதித்த வீராங்கனைகள்

May 5, 2024, 8:49 AM IST

தலைமன்னார் டூ தனுஷ்கோடி

மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீராங்கணைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்க்கு  அனுமதி  கோரியிருந்தனர்.

இந்திய இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிகிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர். தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்த தொடங்கி 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தார். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்