“சாமி கேப்டன் நல்லா இருக்கனும்” விஜயகாந்துக்காக கடவுளுடன் பாசப்போராட்டம் நடத்தும் 5 வயது மழலை

“சாமி கேப்டன் நல்லா இருக்கனும்” விஜயகாந்துக்காக கடவுளுடன் பாசப்போராட்டம் நடத்தும் 5 வயது மழலை

Published : Dec 01, 2023, 11:19 AM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி 5 வயது குழந்தை இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வீடியோ தேமுதிக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் கொட்டாமேடு கிராமத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு வருகை தந்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் தனது தீவிர தொண்டரான ராஜீவ்காந்தி & சத்யா இவர்களுக்கு தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கேள்விபட்ட தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி ராஜீவ்காந்தி, சத்யா தம்பதியரின் 5 வயது  குழந்தை நிவேஷ் தனது தாய், தந்தைக்கு திருமணம் செய்து வைத்த கேப்டன் விஜயகாந்த் பூர்ண நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தேமுதிக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

00:27Kallakurichi: கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வலியால் துடிதுடித்து உயிருக்கு போராடிய நபர்; வைரலாகும் வீடியோ
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
02:31 90 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு 5000 லிட்டர் பால் அபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
02:23புகழேந்தி எம்.எல்.ஏ. உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
23:31ஆளுநருக்கு சட்டம் தெரியாதா? நீதிமன்றம் தான் சரி.. ஆளுநரை வெளுத்து வாங்கிய அமைச்சர் பொன்முடி..
02:15Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்
04:09பொன்முடி மீதான தண்டனை நிறுத்தி வைப்பு; திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
04:42ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு
02:54விளவங்கோடு தொகுதியை காலியானதாக அறிவித்த சபாநாயகர், பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியை அறிவிக்காதது ஏன்? பாஜக
05:59“உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த பொன்முடி