Watch :ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்ட நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி! திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்

Watch :ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்ட நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி! திருச்சி ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்

Published : Apr 05, 2023, 07:14 PM ISTUpdated : Apr 05, 2023, 07:39 PM IST

கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். அங்கிருந்து கும்பகோணம் சென்ற இருவரும் பிராத்தனை முடித்துக்கொண்டு திருச்சி திரும்பினர்.
 

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அக்டோபர் மாதம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். அங்கிருந்து கார் மூலம் கும்பகோணம் சென்றனர். அங்கு வழுத்தூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். இருவரும் பிராத்தனை முடித்துக்கொண்டு மீண்டும் திருச்சி திரும்பினர்.



சென்னை செல்வதற்காக திருச்சி ரயில் நிலையம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவனை கண்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர் இதனால் திருச்சி ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சில ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்காமல் வந்திருந்தனர் அவர்களே பரிசோதகர்கள் எச்சரித்து அனுப்பினர்

இந்த பயணத்தில், நயன்-விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தைகளை தங்களுடன் அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more