VIDEO | ஏமாற்று பேர்வழிகளிடம் பணத்தை இழந்த பெண்!- நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!

VIDEO | ஏமாற்று பேர்வழிகளிடம் பணத்தை இழந்த பெண்!- நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!

Published : Jun 20, 2023, 10:10 AM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி. இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதே போல் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது.

இந்த இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தினி மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அவருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:03144 குடும்பங்களுக்கு கடவுளாக மாறிய பைலட்டுகளுக்கு குவியும் பாராட்டுகள்
00:22144 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ விமானி; வைரலாகும் வீடியோ!
2 மணி நேர திக் திக்; பத்திரமாக திருச்சியில் தரையிறங்கிய விமானம் - சந்தோஷத்தில் ஊழியர்கள்! Viral Video!
02:02Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!
00:57Trichy Video: திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஜோடியாக தென்பட்ட 9 அடி நீள அரக்கன்; பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
05:04திருச்சி விமான நிலைய 2வது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது.. இதுல இவ்வளவு பெசிலிட்டி இருக்கா?
05:49சவுக்கு சங்கர்.. திருச்சியில் உதவி ஆய்வாளர் கொடுத்த புகார்.. ஜாமினில் விடுவிப்பு - அடுத்து நடந்தது என்ன?
03:19சவுக்கு சங்கர் வழக்கு.. குற்றம்சாட்டப்பட்ட பெலிக்ஸ் - விசாரணைக்கு பின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்!
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
01:28Car Festival: சமயபுரம் மாரியம்மன் ஆலய சித்திரை தேரோட்ட திருவிழா; ஆயிகணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Read more