நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published : Oct 31, 2023, 03:26 PM IST

நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி. சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. இந்த மழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பல மணி நேரம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளான குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. 

குறிப்பாக பிரதான அருவி, பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து சற்று குறைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு வளையத்தை தொட்டு தண்ணீர் கொட்டி வருவதால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அருவியின் ஓரத்தில் நின்று மட்டும் சுற்றுலா பயணிகள் குறித்து செல்வதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பழைய குற்றாலம் அருகில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதன் தொடர்ச்சியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்பொழுது, பழைய குற்றாலம், பிரதான அருவியில் நீராடிச் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்
Read more