Watch : செப்.15ல் வழங்கப்படும் ரூ.1000! மேடையில் இருப்பவர்களுக்கு கிடைக்காது! அமைச்சர் பேச்சால் சிரிப்பலை!

May 10, 2023, 12:23 PM IST

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் திமுகவின் ஈராண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் இரண்டு ஆண்டுகள் திட்டங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது, குடும்ப தலைவிகளுக்கான மாதந்திர உரிமை தொகை 1000 ரூபாய் வழங்குவது குறித்து பேசினார், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கண்டிப்பாக வழங்கப்படும் என்றார். ஆனால், அந்த ஆயிரம் ரூபாய், மேடையில் இருக்கும் எங்களுக்கு கிடையாது என அமைச்சர் கூறியதும் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.



தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர், சட்டப்பேரவையில் பேசியதை குறிப்பிலிருந்து எடுக்க வேண்டுமென எதிர்த்து நின்ற ஒரே தலைவர் முக ஸ்டாலின்தான் என குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.