Watch : அரசால் கைவிடப்பட்ட கிராமமா? அடிப்படை வசதிகள் கேட்டு அல்லல் படும் நரிக்குடி மக்கள்!

Watch : அரசால் கைவிடப்பட்ட கிராமமா? அடிப்படை வசதிகள் கேட்டு அல்லல் படும் நரிக்குடி மக்கள்!

Published : Apr 01, 2023, 11:22 AM IST

சங்கரன்கோவில் அருகே சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள். பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சங்கரன்கோவில் அருகே உள்ளது நரிக்குடி கிராமம். பஞ்சாயத்து உட்பட்ட நான்கு கிராமங்களில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நரிக்குடி கிராமம், பிரதான சாலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் போக்குவரத்திற்காக எந்த ஒரு சாலை வசதியும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இதனால் இந்த கிராமத்திற்கு முறையான பேருந்து வசதியும் செய்து தரப்படாததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் வசதி, வாறுகால் வசதி மற்றும் சுகாதார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நரிக்குடி கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காததால் தாங்கள் இன்னும் பின்னோக்கிய காலத்தில் தான் வாழ்ந்து வரும் நிலையில் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மேலும் இந்த நிலைக்கு காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01:16Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு
00:24எமன் ரூபத்தில் வந்த மாடு.. பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் துடிதுடித்து பலி! வெளியான பகீர் வீடியோ!
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
00:58பஸ் போகாது போனா தண்ணீரில் மாட்டிக் கொள்ளும்! எச்சரித்த நபர்! உதாசீனப்படுத்திய ஓட்டுநர்!இறுதியில் அலறிய பயணிகள்
04:35கம்பியில் சுற்றப்பட்ட உடல்.. வாயில் இருந்த Scrubber.. ஜெயக்குமாரின் மர்ம மரணம் - ஐஜி கண்ணன் கொடுத்த தகவல்!
04:41நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் தகனம்.. கரைச்சுத்துபுதூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம்..
08:41அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
05:14நீ எல்லாம் ஒரு அமைச்சரா? அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க முயன்ற திமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?
01:4925 வருசமா உங்களுக்குதான ஓட்டு போட்டோம்; திமுக கோட்டையில் அமைச்சருக்கு எதிராக மக்கள் ஆவேசம்
00:52கரைல இருந்த மண்ண அள்ளிட்டு பொயிட்டாங்க; வேலை ரொம்ப மந்தம் - அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்