ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராய மூலப் பொருட்கள் பறிமுதல்! போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராய மூலப் பொருட்கள் பறிமுதல்! போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Published : May 31, 2023, 01:33 PM IST

ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்தவரை பிடிக்க சென்ற போலீசாருக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபரை பல்வேறு வழக்குகளின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு அருகே பண்டார ஊத்து மலை கிராமப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ் எஸ் ஐ மணிகண்டன் தலைமையாலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பொன்னன் படுகையைச் சேர்ந்த சின்னன் (வயது 57) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக கடுக்காய், பட்டை, நமஸ்காரகட்டி உள்ளிட்ட மூலப்பொருட்களை ஊரல் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்ய முயற்சி செய்த போலீசாரை அரசு பணி செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரிடமிருந்து கள் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

01:11தேனி: பேருந்தில் பயணித்த பெண் தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்.. வைரலாகும் CCTV காட்சிகள்..
08:50அரக்கத்தனமான ஜென்மம்.. அந்த வார்த்தையை சொல்லி எடப்பாடி பழனிசாமியை திட்டிய டிடிவி தினகரன்.!
01:44தாய்க்கு பிரமாண்ட கோவில்; கையேந்தி வருபவர்களுக்கு அள்ளி கொடுக்கும் மருத்துவர் - தேனியில் சுவாரசியம்
03:06நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்; சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி - ஜூனியர் எம்ஜிஆர்
02:23தனது வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம்
04:20கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தேனி தேவராஜ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்
02:28தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணம் பெறவேண்டி தொண்டர்கள் அங்கபிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு
01:31வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை கடித்து குதறிய தெருநாய்கள்; வீடியோ வெளியாகி பரபரப்பு
02:04தொடர் மழை எதிரொலி; சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகளுக்கு தடை
01:25கடைசி நேரத்தில் ஓடி வந்த விமல்; கதறி அழுத மாரிமுத்துவின் மகன்