கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்

Mar 5, 2024, 4:29 PM IST

கும்பகோணத்தில் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறி தனியார் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி கடையிலிருந்து நடுரோட்டிற்கு இழுத்து வந்து கடுமையாக தாக்கி, அவர்கள் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 9 பேர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் இருவரை கைது செய்துள்ள நிலையில் மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.