கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்

கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்

Published : Mar 11, 2024, 02:55 PM IST

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ நாடியம்மன் திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர்.

தஞ்சை மாவட்டம்,  பட்டுக்கோட்டை அடுத்த நடுவிக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை பூர்த்தி விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. மண்டல பூஜை பூர்த்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ நாடியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற வள்ளி கும்மியாட்டம் போல் ஒட்டு மொத்த டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக கோயில் வளாகத்தில் அதே நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் சீருடை போல் சேலை அணிந்து சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20 திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர். இது பார்ப்பவர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more