காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்; தனியார் பேருந்து ஓட்டுநர்களை லெப்ட், ரைட் வாங்கிய அதிகாரிகள்

காதை கிழிக்கும் ஹாரன் சத்தம்; தனியார் பேருந்து ஓட்டுநர்களை லெப்ட், ரைட் வாங்கிய அதிகாரிகள்

Published : Oct 09, 2023, 06:00 PM IST

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்திய தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சேலத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்தன. இதையடுத்து, சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) தாமோதரன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சதாசிவம், செந்தில், ராமரத்தினம், மாலதி ஆகியோர் இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தினர். 

இதில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகளின் ஏர்ஹாரன் சோதனை செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 10க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து தாமோதரன் கூறுகையில்,  சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை, தனியார் பஸ்கள் மட்டுமின்றி பிற வாகனங்களில் பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன. இதை தவிர்க்க வேண்டும். மீறி பயன்படுத்துவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்