சாரி பாஸ் கொஞ்சம் போதை அதிகமாயிடுச்சி; சொகுசு காரை நடுரோட்டில் பார்க் செய்து உறங்கிய குடிமகன்

சாரி பாஸ் கொஞ்சம் போதை அதிகமாயிடுச்சி; சொகுசு காரை நடுரோட்டில் பார்க் செய்து உறங்கிய குடிமகன்

Published : Oct 14, 2023, 07:56 PM IST

சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலையில் போதை தலைக்கேறிய நபர் ஒருவர் சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு உறங்கிய சம்பவத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலையில் AVR ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவே நீண்ட நேரமாக சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்த நபர் மது போதையில் காரை ஓட்ட முடியாமல் நடுரோட்டிலேயே நிறுத்தி உறங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை அடுத்து வாகன ஓட்டிகள் காரின் கண்ணாடியை உடைத்து மது போதையில் இருந்த நபரை எழுப்ப முயன்றனர். ஆனால் போதை தலைக்கேறியதால் அவர் எழவில்லை. இதனை அடுத்து மது போதையில் இருந்த நபரின் நண்பர் ஒருவர் அவரை காரிலேயே மாற்றி அமர வைத்து அழைத்துச் சென்றார்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more