அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?

Published : May 31, 2024, 08:46 AM IST

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 35 லட்சத்தி 11 ஆயிரத்து 800 ரூபாய் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் மே மாத பக்தர்களால் பெறப்பட்ட காணிக்கைகளை உண்டியல் திறந்த என்னும் பணி நேற்று நடைபெற்றது. ராமநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் உப கோவில், ராமர் தீர்த்தம் லக்ஷ்மண தீர்த்தம் சீதா தீர்த்தம் நம்புநாயகி அம்மன் கோவில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளிட்ட உப கோவில்  உண்டியல்கள், காசோலை, யானை பராமரிப்பு நிதி, மற்றும் திருக்கோவில் உண்டியல்கள் திறக்கும் பணி நடைபெற்றது 

உண்டியல் என்னும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள், வங்கிப் பணியாளர்கள் என ஏராளமானோர் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 9 மணி அளவில் உண்டியல் என்னும் பணி தொடங்கி மாலை 5 மணி அளவில் நிறைவு பெற்றது. மொத்தமாக உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 35 லட்சத்தி 11 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்க பணமும் தங்கம் 77 கிராமும் , வெள்ளி 4 கிலோ 105 கிராம், மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் வரப்பட்டுள்ளதாக அருள்மிகு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

03:14Vaikasi Amavasai 2024: வைகாசி மாத அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் குவிந்த பக்தர்கள்!
02:38அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
01:55சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!
00:58நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!
01:03போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்
01:48ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
02:12மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு
01:52ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
03:53புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்