மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு

மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு

Published : Feb 07, 2024, 04:15 PM ISTUpdated : Feb 07, 2024, 04:18 PM IST

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் நடிகர் வடிவேலு தனது தயாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டிய நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி(87 ) வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார். இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது தாயாரின் ஆன்மா சாந்தியடைவதற்காகவும், அவர்கள் வைகுண்டம் பதவியடைவதற்கும் அவர்களுக்கு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில்   நந்திமண்டபத்தில்  மோட்சதீபம் ஏற்றினார்.  

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் வடிவேலு, எனக்கு  எல்லாமே என்   தாயார் தான். அவர் இறந்த துக்கத்தை  என்னால் தாங்க முடியவில்லை. இந்த சோகத்தில் இருந்து  என்னால் மீள முடியவில்லை என்றார். மேலும் செய்தியாளர்கள் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பாக கருத்து கேட்ட பொழுது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். 

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். டி ராஜேந்தர் வந்தார், ராமராஜன் வந்தார், பாக்யராஜ் வந்தார் ஆகவே மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என சொல்ல முடியாது அல்லவா என அவர் தோரணையில்  கேள்வி எழுப்பினார்.

03:14Vaikasi Amavasai 2024: வைகாசி மாத அமாவாசை.. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் குவிந்த பக்தர்கள்!
02:38அடேங்கப்பா.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
01:55சித்திரை மாத அமாவாசை! முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!
00:58நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி.. இடைத்தரகர், நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கௌதமி புகார்!
01:03போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச புத்தகம் வழங்கிய இளைஞர் மன்றத்தினர்
01:48ராமநாதபுரம் அரசுப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்த்து மெய் சிலிர்த்த மக்கள்
02:12மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - நடிகர் வடிவேலு
01:52ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
03:53புரோட்டா இல்லை என்று கூறிய கடைக்காரரை காற்றில் பறக்க விட்டு பந்தாடிய ரௌடிகள்
Read more