மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்

மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்

Published : Mar 02, 2024, 02:51 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் உலா வந்த இரண்டு காட்டு யானைகளால் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வருவது வழக்கம். அந்த வகையில் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை 12வது மற்றும் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே இரண்டு ஆண் காட்டு யானைகள் சாலையோரம் நிற்பதாக குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் படி வனத்துறையினர் காட்டு யானைகள் சாலைக்கு வராதபடி கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டு யானைகளை கண்டால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் அருகில் சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குன்னூர் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்!
02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்
02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்
00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்
00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்
00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்
01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்