நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவி தேங்காய் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்

Aug 12, 2023, 9:10 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ரிடிவிகா. இவரது தந்தை உணவகம் நடத்திவருகிறார். இந்நிலையில் சிறுவயதில் இருந்தே யோகாசனத்தில் பல்வேறு சாதனைகள் செய்துவந்துள்ளர். இந்நிலையில் ஆரஞ்சு  கின்னஸ் சாதனைக்காக (Ornge world regord) அரைமணி நேரம் 3 தேங்காய் மீதுஅமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினார். இந்தமாணவியை பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பள்ளிஆசிரியர்கள், பள்ளிகுழந்தைகள் வெகுவாக பாராட்டினர். இதுபற்றி மாணவி ரிடிவிகா கூறும்போது அடுத்தாக ஆனிபலகையின் மீது யோகா செய்யவேண்டும் என்பது எனது ஆசை எனக்கூறினார்.