மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!!

Sep 17, 2022, 6:02 PM IST

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில்  அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் சமூக நீதி நாள்  உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் மூர்த்தி மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், பூமிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் .வசந்த் உள்ளிட்ட அதிகாரிகளும்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.