500 கன அடி தண்ணீர் திறப்பு..! போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..

500 கன அடி தண்ணீர் திறப்பு..! போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ..

Published : Aug 21, 2019, 06:31 PM IST

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
 

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீரை விவசாய தேவைக்காக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழக முதல்சர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து திறந்து வைத்தார்.

அந்த நீரானது கடந்த 15ம் தேதி கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அணைக்கு வந்த நீரை அப்படியே திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர் கல்லணையை அடைந்ததும் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாயனூர் கதவணையில் இருந்து கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூஜைகள் செய்து தண்ணீரை திறந்து வைத்தார்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 9 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 500 கன அடி தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்காலிலும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை கொண்டு 27 அயிரத்து 862 ஏக்கர் பாசன வசதி பெறும் என்றும் இன்று முதல் தண்ணீர் இருப்பு வரை திறக்கப்படும் என்றும், முதல் கட்டமாக 500 கன அடி திறப்பை படிப்படியாக உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

05:04Vanathi Srinivasan : 2047லில் வளர்ந்த இந்தியா.. அதுவே நம் பிரதமரின் கனவு - கரூரில் பேசிய வானதி ஸ்ரீனிவாசன்!
02:53 ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!
08:46"திமுக தேர்தல் அறிக்கையை கசக்கி வீச வேண்டும்".. கரூரில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டம் - சீரிய அண்ணாமலை!
01:47சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
01:22அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறை; கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அகற்றப்படாத விளம்பரங்கள்
03:08ஹெல்மெட்டோட வாங்க, டிபன் பாக்சோட போங்க; கரூர் போலிசார் விப்புணர்வு
03:10கரூரில் ஆட்சியருக்காக நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட மழலைகள்
03:56திமுகவில் வாரிசு இருக்கு.. உங்களுக்கு இல்லையா ஆஸ்பத்திரிக்கு போங்க.. பங்கமாக கலாய்த்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
01:35பயணிகளின் உயிரை பணயம் வைக்கும் ஓட்டுநர்கள்; கரூரில் நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
01:36கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க கரூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவை வடம் பிடித்து இழுத்தனர்