போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

Published : Jan 23, 2024, 07:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் காப்பாற்ற முயற்சிப்பதாகக்கூறி உறவினர்கள், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக பாதிரியார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்ற அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து இன்று கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட சேகர் குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேவியர் குமாரின் மனைவி செய்தியாளரிடம் கூறுகையில், எனது கணவரின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளில் ஒருவரான ரமேஷ் பாபு என்பவர் திமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவரை காப்பாற்றுவதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உதவி செய்கிறார். 

தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அதுவரை எனது கணவரின் உடலை வாங்க மாட்டேன் என்று தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட மைலோடு தேவாலயத்தில் முன்பு கொலையாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்
Read more