மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்

Published : Dec 12, 2023, 01:47 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர் திடீரென கோவில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே செண்பகத்தறை பகுதியைச் சேர்ந்தவர் கோபி. சென்னையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் இவர் அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன்  வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை தனியாக சென்னையில் இருந்து சொந்த ஊரான செண்பகத்தறைக்கு வந்த இவர் மது குடித்துவிட்டு வந்து கோவில் கிணற்றினுள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சத்தம் போட்டு கத்தவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். மேலும் கொல்லங்கோடு தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீ அணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடம் வருவதற்குள் ஊர்மக்கள் கயிறு மூலம் கிணற்றில் குதித்த கோபியை பத்திரமாக மீட்டனர். 

விசாரணையில் மனைவியிடம் தகராறு செய்துவிட்டு வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வந்த தீ அணைப்பு துறையினர் திறந்து கிடக்கும் கிணறை மூடி வைக்கும் படி அறிவுறுத்தி சென்றனர். இந்த சம்பவம் அந்த சிறிது நேரத்திற்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்