கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை

கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை

Published : Jan 24, 2024, 07:26 PM ISTUpdated : Jan 24, 2024, 07:30 PM IST

கன்னியாகுமரியில் இருந்து கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கேரளா அரசு பதிலுக்கு மருத்துவம், இறைச்சி கழிவுகளை கொட்டி மாவட்டத்தையே குப்பை கிடங்காக மாற்றி வருவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை அழிக்கும் அளவில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் ஒரு கொடுமையான நிலைமை நிலவி வருவதை தமிழக முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் தினமும் 500க்கும் மேற்பட்ட  லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இனியும் கனிம வளங்களை கடத்துவதை அனுமதிக்க இந்த மாவட்ட மக்கள் தயாராக இல்லை. கேரள மாநிலத்தில் ஏராளமான  மலைகளும், மணல்மேடுகளும் இருந்தும் கூட அங்குள்ள அரசு அந்த கனிம வளங்களை எடுப்பதில்லை. அந்த மாநில மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். அந்த விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுகிறேன். 

அதே நேரம் இங்கிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதற்கு பதிலாக கேரள மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் இங்கு வந்து கொட்டப்பட்டு இந்த மாவட்டம் குப்பை கிடக்காக மாற்றப்பட்டு வருகிறது. 20 லட்சம் மக்கள் வாழும் இந்த பகுதியை அழிக்க தமிழக அரசு துணை போவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதன் மூலம் குமரி மாவட்டம் மக்களை ஆழ தமிழக அரசுக்கு தகுதி இல்லை என்பது தெளிவாகிறது. நேற்று திருவட்டார் அருகே   கனிமவள கடத்தல் லாரி மோதி இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

03:18கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!
04:49சுயநலமின்றி மக்கள் பணியாற்றவே பாஜகவில் இணைந்தேன் - விஜயதாரணி விளக்கம்
01:06கன்னியாகுமரியில் லாரி மீது இருசக்கரவாகனம் மோதி கேபிள் ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே பலி
03:12சாமிதோப்பில் கோலாகலமாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் தேர் திருவிழா; திரளான தென்மாவட்ட மக்கள் பங்கேற்பு
04:07கேரளா அரசு கன்னியாகுமரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் கவலை
08:30போக்குவரத்து ஊழியர் கொலை வழக்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றாவாளிகளை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
01:56கன்னியாகுமரியில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து கடையில் மோதி விபத்து
00:25அரசுப் பேருந்தில் மனநலம் பதிக்கப்பட்ட நபரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர்
01:41மனைவியுடன் ஏற்பட்ட தகராறு; திடீரென கோவில் கிணற்றில் குதித்த நபரால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள்