Watch : தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் விநோத வழிபாடு! - தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

Watch : தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் விநோத வழிபாடு! - தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!

Published : May 29, 2023, 10:55 AM IST

கடத்தூர் அருகே, குருமன்ஸ் இன மக்களின் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குரும்பர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குலதெய்வமான வீரபத்ர சுவாமியை கொண்டாடும் வகையில் ஊர் தர்மகர்த்தா சேகர் தலைமையில் விழா ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

காலை முதல் வீரபத்ர சுவாமி, பாரூர் அப்பன் சுவாமி, தொட்டில் அம்மன் வீரம்மாள், உள்ளிட்ட குல தெய்வங்களை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாய் எடுத்து சென்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.

மேலும் மேளதாளத்துடன் பக்தர்கள் நடனம் ஆடியவாறு தலையில் தேங்காய் உடைத்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு