திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பேருந்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

திடீரென தீ பிடித்து எரிந்த சொகுசு பேருந்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

Published : Nov 29, 2023, 11:26 AM IST

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் சொகுசுப் பேருந்து பெங்களூருவில் இறக்கி விட்டு விட்டு மீண்டும்  தருமபுரி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர்கள் அப்துல் அமீது, அலிஅக்பூர் ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். 

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென கரும்புகையுடன் திடிரென தீ பற்றி எரிவதை அறிந்த ஓட்டுநர்கள் இருவரும் உடனடியாக பேருந்தை சாலையில் நிறுத்தி விட்டு பேருந்திலிருந்து இறங்கி தப்பியுள்ளனர். சிறிது நேரத்திற்குள் பேருந்து முழுவதும் தீ மள மளவென பற்றி  எரிந்தது. தகவலறிந்து தருமபுரியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு தீயணைப்பு வாகனங்ள் தண்ணீரை பீய்ச்சி  அடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயி்ர்ச்சேதமோ ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சாலையின் இரு புறமும் இணைப்பு  சாலைகள் இருந்ததால்  பெரிதாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது

பேருந்திலிருந்த ஏ சி அல்லது, இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணத்தினால் தீ பிடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு
Read more