தர்மபுரியில் கிணற்றில் விழுந்த குழந்தை பருவம் மாறா குட்டி யானை பத்திரமாக மீட்பு

தர்மபுரியில் கிணற்றில் விழுந்த குழந்தை பருவம் மாறா குட்டி யானை பத்திரமாக மீட்பு

Published : Mar 11, 2023, 04:06 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் கிணற்றில் விழுந்த 4 மாத குட்டி யானையை வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கட்டமடுவு கிராமத்தில் தண்ணீர் நிரைந்த சுமார் 30 அடி ஆழத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் 4 மாத குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது. யானை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த பொதுமக்கள் உடனடியாக இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் கொடுத்த வழிகாட்டுதலின்படி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவி்க்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக யானையை மிட்கும் பணியில் ஈடுபட்டனர். பிறந்து நான்கு மாதங்களேயான, குழந்தை பருவம் மாறா இந்த யானையை குறுகிய நேரத்திலேயே அதிகாரிகள் கயிறு கட்டி கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். 

மீட்கப்பட்ட குட்டி யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு தண்ணீர் மற்றும் முதலுதவி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து யானை தரையில் படுத்து தனது குறும்பு தனத்தை காட்டத் தொடங்கியது. யானையின் குறும்புத் தனத்தை அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

குட்டி யானை கிணற்றில் விழும் பொழுது தண்ணீர் இருந்ததால் யானையின் உடலில் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குட்டி யானையானது சிறிய கனரக வாகனத்தில் ஏற்றப்பட்டு ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர்.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு