Viral : யானையை விரட்ட வான வெடி! தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிர்கள் நாசம்!

Viral : யானையை விரட்ட வான வெடி! தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிர்கள் நாசம்!

Published : Mar 16, 2023, 11:18 AM IST

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மலை கிராமத்தில் ஒற்றை யானையை விரட்டுவதற்காக விடப்பட்ட வான வெடி, கரும்பு தோட்டத்தில் விழுந்ததால் ஒன்றரை ஏக்கர் எரிந்து நாசமானது.
 

தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அடுத்த பிக்கிலி மலை கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. இந்நிலையில் பிக்கிலி கிராமத்தை சேர்ந்த ரைஸ் மில் பகுதியில் உள்ள மாதையன் சிவராஜ் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு விவசாயம் செய்துள்ளனர்.

இந்நிலையல் வனப்பகுதிதை விட்டு கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த காட்டு யானை இந்த கரும்பு தோட்டத்தில் நுழைந்ததை அடுத்து வனத்துறையினர் அஜாக்கிரதையாக வான வெடி வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வானவெடி கரும்பு தோட்டத்திற்குள் விழுந்து சுமார் ஒன்றை ஏக்கர் அளவில் கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்த வந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் கரும்பு காடு பற்றி எரிந்தது குறித்து வருவாய்த் துறையினர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் வந்து நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், தெரிவித்து தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாப்பாரப்பட்டி - பிக்கிலி கிராமத்திற்கு செல்லும் ரைஸ் மில் சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

03:16வயித்துல எந்த குழந்தை இருந்தா என்னம்மா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாக சிக்கிய கும்பல்.!
01:05ஒகேனக்கல்லில் மீண்டும் தொடங்கிய பரிசல் சவாரி; சுற்றுலா பயணிகள் ஆரவாரம்
01:51அக்னி பகவானே இந்த வருசம் பணம் கொட்டனும்; வங்கி லாக்கர் முன் யாகம் வளர்த்த அதிகாரிகள் - வாடிக்கையாளர்கள் ஷாக்
01:32உன்ன நம்பி தான் லட்சம் லட்சமா கடன் வாங்கிருக்கேன் என்ன காப்பாத்து முருகா; பக்தர் வினோத கோரிக்கை
01:16தருமபுரியில் குறைகளை கூற வந்த பொதுமக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக சேர்மனின் கணவர்
01:21மாஸாக டிராக்டரில் வந்து உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
04:28தருமபுரியில் கேப்டன் விஜகாந்துக்கு மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்த 300 தொண்டர்கள்
01:56சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்
01:18போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி? பதிவாளர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு
01:43தருமபுரியில் நில அளவீடுக்கு எதிராக தீக்குளிக்க முயன்ற மூதாட்டி; 12 பேர் மீது வழக்குப்பதிவு