வெவ்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்: கோவையில் பொங்கல் விழா கோலாகலம்

Jan 5, 2024, 2:45 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் வெவ்வேறு மொழி பேசும் மாணவர்கள், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் சமத்துவ பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடினர்.