கோவையில் நடு ரோட்டில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த கால் டாக்சி ஓட்டுநரால் பரபரப்பு

Mar 9, 2023, 12:17 PM IST

கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபல தனியார் நிறுவனத்தின் கால் டாக்சி அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே கால் டாக்சி நிறுவனத்தின் ஓட்டுநருக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சக வாகன ஓட்டிகளை தனியார் நிறுவன ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.