கோவை கருப்பராயன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

கோவை கருப்பராயன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

Published : May 15, 2023, 06:13 AM IST

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கருப்பராயன் சுவாமி கோவிலில் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

கோவை மருதமலை சாலை வடவள்ளி அருகே அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயன் சுவாமி திருக்கோவில். இந்நிலையில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்  கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான். 

தொடர்ந்து காலையில் வழக்கம்போல் பூஜை செய்ய வந்த கோவில் பூசாரி உண்டியல் பணம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய முன்னணியினர் கைது!
02:13BJP : பொள்ளாச்சி.. தொழில் வர்த்தக சபை தலைவர் மறைவு - நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்ன அண்ணாமலை!
00:39Shocking Video: நொடிப்பொழுதில் சூழ்ந்துகொண்ட தெருநாய்கள்; கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை காப்பாற்றிய தந்தை
00:58Kovai Kutralam: மலைகளுக்கு நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
00:59"அட நானும் வாக்கிங் தான் வந்தேன்".. இரவு நேரத்தில் ஷாக் கொடுத்த காட்டு யானை - தெறித்து ஓடிய தம்பதி! Video!
00:58Coimbatore: முன்னே செல்வது யார்? ஆட்சியர் அலுவலகம் முன்பாக மல்லுகட்டிய அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள்
01:00Shocking Video in Coimbatore: சாலையில் நடந்து சென்ற முதியவரை ஆக்ரோஷமாக மித்து தள்ளிய காட்டு யானை
02:16மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை.. குன்னூர் சாலையில் முறிந்து விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு! Video!
கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் களைகட்டிய முப்பெரும் விழா! கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
00:26Rainbow Coimbatore : கோவையில் சில்லென்ற வானிலை.. விண்ணை அலங்கரித்த இரு வானவில் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Read more